Sunday, October 19, 2014

எம்மை பற்றி

விருட்சம் காரைதீவு சமூகசேவை அமைப்பு என்பது ஓர் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ இலாபநோக்கமற்ற சமூகசேவை அமைப்பாகும். 2008.03.23 ம் திகதி அன்று காரைதீவை மையமாக கொண்டு 1999 BATCH மாணவர்களால் 1999 உயர்தர மாணவர் அமைப்பு என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் அமைப்பினது செயற்பாடுகள் விரிவடைந்ததன் காரணமாக "விருட்சம்" என்ற நாமம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டு  விருட்சம் காரைதீவு சமூகசேவை அமைப்பு உதயமாகியது. இதனடிப்படையில் அங்கத்தவர்களின் சுபீட்சத்திற்காகவும் சமூக நலன் கருதியும் காலத்திற்கு காலம் பல்வேறு பணிகள் முனைப்புடன் ஆற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் karaitivu99.blogspot.com என்ற இவ் இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது அமைப்பின் தற்போதைய நடப்பாண்டு

தலைவர்: Mr.J.Prasanaa (Teacher of English)

செயலாளர்: Mr.V.Vijayapawa (Teacher)

பொருளாளர்: Mr.T.Vinayagamoorthy(Development Officer)

ஆகியோர் உள்ளனர்.




ஆங்கிலம் கற்போம்

Wednesday, October 15, 2014

முட்டைக்கோஸ் ஆட்டிசம் நோய் பாதிப்பை குறைக்கிறது!

முட்டைக்கோஸ் போன்ற வெளிநாட்டு காய்கறியில் உள்ள சில சத்துகள், ஆட்டிசம் எனப்படும், மனச் சிதைவு குறைபாட்டிற்கான சில அறிகுறிகளை நீக்குகிறது என, ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மாஸ் ஜெனரல் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோக்கொலி, காலிபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றில் உள்ள, சல்போராபேன் என்ற மூலக்கூறு, ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளின் செயல்பாடு மற்றும் தகவல் தொடர்பு அறிகுறிகளை குறைத்து, நீண்ட காலம் உட்கொள்ளப்பட்டால், நோயின் பாதிப்பை நான்கு வாரங்களிலேயே குறைக்கிறது. இதற்கான ஆய்வில், 13 27 வயது வரையுள்ள, 44 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மிகவும் குறைவாக, நான்கு வாரங்களிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதையும், தொடர்ந்து, 18 வாரங்கள் இந்த காய்கறிகளை சாப்பிட்ட ஆட்டிசம் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது எனவும் கண்டறியப்பட்டது.

Tuesday, October 14, 2014

கணினி வேகமாக செயல்பட

நம்ம கணினி நல்ல Configuration-ல
இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப
நேரம் எடுத்துக்கும். சில
நேரங்கள்ல
நாமே கடுப்பாகி off பண்ணி
போட்டு போய்டுவோம். கீழ்
குறிப்பிட்ட
மாதிரி வழிமுறைகள்
பின்பற்றினால்… உங்கள்
கணினி வேகமா Boot ஆகும்…
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:
\windows\prefetch\ntosboot-*.* /
q" (கொட்டேஷன் இல்லாம)
தட்டச்சு செய்யுங்க, பின்னர்
"ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட்
பண்ணுங்க, "gpedit.msc"-
னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன,
டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள
"Windows Settings" டபுள் கிளிக்
பண்ணி உள்ள போங்க, "Shutdown" –
னு இருக்குற option னைகிளிக்
பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன்
ஆகும், கிளிக் "add", "Browse"-ல
போய், முன்ன சேவ் பண்ண File,
ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து,
"devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபிள் கிளிக் "IDE ATA/ATAPI
controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click
பண்ணி, "Properties" செலக்ட்
பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக்
பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel",
Right click பண்ணி "Properties" போய் 9த்
ஸ்டெப்ல செய்தது மாதிரி "OK"
கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய
ரீபூட் (Reboot)
செச்சு சோதனை பண்ணுங்க

Sunday, October 12, 2014

பல்சுவை விருந்து


  • புகழ்பெற்ற சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் என்பாரது இயற்ப்பெயர் "அருண்மொழி வர்மன்" என்பதாகும்.
  • சப்பானிய சிலந்தி நண்டுடைய ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்துக்கு(3.8 மீட்டர் (12 அடி)) சமம்.
  • குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.
  • கருடன், பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.
  • பழங்கள் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் கொண்டவை.
  • டைட்டன் ஆரம் உலகிலேயே மிகப்பெரிய தொகுப்பு மலர் தரும் தாவரமாகும்.

திருப்தி

ஒரு குரு தன்னிடம் படித்த முன்னாள் சீடர்களுக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்தார். அவர்களும் ஏராளமாய் குவிந்தனர்.விருந்து துவங்கும் முன் சீடர்களிடம்,நீங்கள் மனிதர்களைப் போல் உண்ணப் போகிறீர்களா? விலங்குகளைப் போல் உண்ணப் போகிறீர்களா? என்று கேட்டார்.
எதற்காக இப்படி கேட்கிறார் என்று புரியாத சீடர்கள்,ஏன்…மனிதர்களைப் போல் தான் உண்ணப்போகிறோம், என்றனர்.அதற்கு மகான்,அப்படியானால் நீங்கள் தவறு செய்கிறீர்கள்.
ஏனெனில், விலங்குகள் தங்களுக்கு போதுமான அளவு உணவையே எடுத்துக் கொள்ளும். மனிதர்கள் தான் என்ன சாப்பிட்டாலும், இதை இன்னும் கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாமோ! இதை இன்னும் ருசியாக சமைத்திருக்கலாமோ என்று குறைபடுவார்கள்.
மனிதர்களை திருப்திப்படுத்த முடியாது. மிருகங்கள் அப்படியில்லையே! என்றார்.இனியேனும், இருப்பதைக் கொண்டு திருப்திப்படுவோமாக!

மரண அறிவித்தல்


Saturday, October 11, 2014

உலகின் வேகம் கூடிய இணைய உலாவி

இணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்கு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
தற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.
எனினும் தற்போது MxNitro எனும் உலாவி கூகுள் குரோமிற்கே சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவே உலகின் வேகம் கூடிய இணைய உலாவி என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கூகுள் குரோமினை விடவும் 30% வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 8, 2014

சந்திர கிரகணம்...8.10.2014 புதன்கிழமை

சந்திர கிரகணம்....!!!
8.10.2014 புதன்கிழமை....!!!
சந்திர கிரகணம் .நேரம் :
சந்திர கிரகணம் வரும்
புரட்டாசி மாதம் 22 ஆம்
தேதி அதாவது 8.10.2014
புதன்கிழமை ரேவதி நட்சத்திரத்தில்
கேது கிரஹஸ்த முழு சந்திர கிரகணம் ஆகும்.அன்றைய சந்திரோதயம்
மாலை 5.53 மணிக்கு ஆரம்பிக்கும்
மாலை 6.04
மணிக்கு முடியும் .அதாவது 11
நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும் .இக் கிரகணத்தின் தாக்கம் என்பது  4 மணித்தியாலங்கள் முன் ஆரம்பிக்கிறது அதாவது மதியம் 2.44 மணி தொடக்கம் 6.05 மணி வரையாகும்.கிரகணதோஷ சாந்தி என்பது மதியம் 2.44 க்கு முன் உணவருந்திவிட வேண்டும்.
உத்திரட்டாதி ரேவதி அஸ்வினி ஆயில்யம்
கேட்டை ஆகிய நட்சத்திரத்தில்
பிறந்தவருக்கு கிரகண தோஷம்
உண்டு இவர்கள் சாந்தி செய்து
கொள்ளவும்
பெரிய ஆலயங்களில் -
கருவறைகளை மூடி, பின்பு கிரகணம்
முடிந்ததும் - பரிகார
பூஜைகளை முறைப்படி செய்து , அதன்
பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்..
.... தெய்வத்தையே கட்டுப் படுத்தும்
அளவுக்கு சக்தி வாய்ந்தது சந்திர
கிரகணம்
மந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் -
இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த
நேரத்தில் ஜெபிக்கும் மந்திர
ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன்
செயல்படும் ...
கிரகண
காலத்தில்
குளித்து விட்டு காயத்திரி மந்தரத்தையோ
அல்லது அவர்களுக்கு தெரிந்த
மந்தரத்தையோ ஜெபம்
செய்யலாம் .
கிரகணம் முடிந்த பின்
குளித்து விட்டு அருகில் உள்ள இஷ்ட
தெய்வ
கோவிலுக்கு சென்று வழிபட்டு
வாருங்கள் . கிரகணம் முடிந்த பின்
புதிதாக சமைத்த
உணவை உண்ணலாம் .கர்ப்பிணிப்
பெண்கள் - இந்த நேரத்தில்
வெளியே வராமல்
இருப்பது நல்லது..
கர்ப்பிணி பெண்களும் இது போல்
சாந்தி செய்ய வேண்டும்...