மது பெருகி ஓடுகிறது நாட்டில். இதனால் அடுத்த தலைமுறையின் நிலை என்ன ?
இறைவன் அருளாலே இஃதொப்ப தீய பழக்க, வழக்கங்கள் மனிதனிடம் இன்று, நேற்று தோன்றியது அல்ல. என்று மனித குலம் தோன்றியதோ அன்றிலிருந்தே தீய பழக்கங்கள், அசுர பழக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இது வேண்டாம், முற்றிலும் ஒழித்துவிடலாம் என்று மனிதன் எண்ணலாம். ஆனால் இது ஒருபொழுதும் நடக்கப்போவதில்லை என்பதே உண்மையாகும். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இதுபோன்ற தீய பழக்கத்திலிருந்து தம்மை தற்காத்துக்கொள்ள மனதை வைராக்யமாக வைத்துக்கொள்வது அவசியம். அந்த செயலை செய்வதால் என்ன நன்மை ? என்ன தீமை ? என்பதை ஒருவன் சுயமாக சிந்தித்துப் பார்த்தால் அப்பொழுது புரியும். மிருகங்கள் இதுபோன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை. மிருகங்களுக்கு ஐந்தறிவு. மனிதனுக்கு ஆறறிவு என்று மனிதனே கூறிக்கொள்கிறான். ஐந்தறிவு கொண்ட மிருகம் போதைக்கு அடிமையாவதில்லை. ஆனால் ஆறறிவு கொண்டவன் அடிமையாகிறான் என்றால் எங்கே தவறு இருக்கிறது ? என்பதை மனிதன் புரிந்துகொள்ளவேண்டும். இது விளக்கம்.
இதற்கு பிராயச்சித்தம் என்றால் கதிர்மதி எனப்படும் அமாவாசை தினங்களிலே வடக்கு நோக்கி இருக்கின்ற காளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு மிக, மிக உயர்வான பொருள்களைக் கொண்டு அபிஷேகம், குறிப்பாக பசுவின் பாலைக்கொண்டு எத்தனை அளவு முடியுமோ அதைக்கொண்டு அபிஷேகம் செய்து, அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் கனிகளால் மாலை சாற்றி, நறுமண மலர்கள் மாலை சாற்றி அதன் பிறகு மிக, மிக உயர்வான அன்னங்களை, அதை ( தனம் கொடுத்து வாங்கி உண்ண முடியாத ) ஏழைகளுக்கு யார் ஒருவர் தருகிறார்களோ அஃதொப்ப பகுதியிலே அதுபோன்ற பகுதியிலே இதுபோன்ற தீய பழக்கங்கள் படிப்படியாகக் குறையும்