Wednesday, April 9, 2014
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)
உங்கள்
இராசிநாதன் செவ்வாய் 11-ம் இடமான லாபத்தில்,
அருமையாக அமர்ந்துவிட்டான். விரும்பியது கிடைக்கும். எண்ணியது நடக்கும். தொட்டது துலங்கும். சுகஸ்தானத்தில்
சுக்கிரன், பஞ்சமத்தில் புதன். கேட்கவே வேண்டாம்
யோகமோ யோகம்தான். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகம், தொழில் மேலோங்கும். 9-க்குரியவன்
11-ல் இருப்பதால், வீடு, மனை அமையும்.
பொதுவாக கிரகங்கள் நல்ல ஸ்தானங்களில் இருப்பதால்
கவலையில்லா வாழ்க்கை அமையும். 6-ல் சூரியன் உச்சம்
பெற்று இருப்பதால், விரோதிகள் அடிபணிவர். கடன் தொல்லை தீரும்.
உடல் நலனில் மட்டும் கவனம்
தேவை. தனஸ்தானத்தை குருபார்வை செய்வதால், கை நிறைய காசுதான்.
இந்த ஆண்டு பலனை முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்கும். குரு பகவான் 12-6-2014 வரையிலும் மிதுனத்தில் இருப்பார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் இடமாகும். எனவே 12-6-2014 வரையிலும் நீங்கள் அமைதி காக்கவேண்டும். 8-ல் உள்ள குரு பகவானால் வீண் மனவேதனை உருவாகியிருக்கும். 12-6-2014 வரையிலும் பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்படும். நண்பர்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். அதேநேரம் குருவின் 7-ஆம் இடத்துப் பார்வையால் இடர்ப்பாடுகள் சற்று குறையும். என்றாலும் நீங்கள் எப்போதும் விழிப்பாக இருக்கவேண்டும்.
பொதுத்தொண்டு, அறங்காவலர் பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்களின் குடும்பத்தில் குழப்பம் வரலாம். சமூகத்தில் சிலர் வீண் கெட்டபெயர் எடுப்பார்கள். ஒருசில அரசு ஊழியர்கள் திடீர் இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். ஒருசிலர் செய்யாத தவறுக்காக, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனைகளை அடைவார்கள். இன்னும் சிலர் கையூட்டுப் பெற்று காவல்துறை தண்டனைக்கு ஆளாவார்கள். எனவே அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதைக் கைவிடவேண்டும். சிலருக்கு சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்து அவமானம் ஏற்படும். எனவே உங்களது ஒவ்வொரு செயல்பாட்டிலும் கவனமாக இருக்கவேண்டும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தம் 12-6-2014 வரையிலும் இருக்கும். அதுவரை புதிய யுக்திகளைக் கையாளவேண்டும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். புரிந்து வாழ்பவர்களுக்குப் பிரச்சினை எதுவும் வராது. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். 12-6-2014 வரையிலும் குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கிவரவேண்டும். வெளிநாடு செல்ல போட்ட திட்டத்தை சற்று தள்ளிவைக்க வேண்டும். 13-6-2014-க்குப் பிறகு நல்ல நாட்டில் விசா கிடைக்கும். கூடுதல் வருமானத்தோடு பணியாற்றுவீர்கள்.
13-6-2014 வரை உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த குரு பகவான் 9-க்கு வந்துவிடுகிறார். “மாட்டிக் கொண்டவருக்கு 8-ல் சனி; ஓடிப்போனவருக்கு (வெளிமாநிலம் அல்லது வெளிநாடு சென்றவருக்கு) 9-ஆம் இடத்தில் வியாழன்’ என்று சொல்வார்கள். ஒன்பதாம் வீட்டில் குரு வரும்போது நீங்கள் எத்தகைய பலன்களை அடையவுள்ளீர்கள் என்று காண்போம்.
13-6-2014 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் வரும்போது, உங்கள் வாழ்வில் வசந்தகாலம் தொடங்குகின்றது. குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடத்தில்- சந்திரன் வீட்டில் (கடகத்தில்) உச்சம்பெறுகின்றார். தனது சொந்தவீடான மீனத்தை 9-ஆம் பார்வை பார்ப்பது விசேஷம். ஏதாவது ஒரு சொத்தை கூடுதல் விலைக்கு விற்று, ராஜயோகமான வாழ்க்கை வாழ்வீர்கள். மனைவிமூலம் தனலாபம் கிடைக்கும். தொழில்வகையில் ஏற்பட்ட விரோதம் நீங்கி, ஒற்றுமை நிலவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் கூடுதலாக விவசாயம் செய்து நல்ல மகசூலை அடைவார்கள். ஒருசிலர் புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும்.
மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். உயர்கல்விக்காக வெளிநாடு சென்று படிக்க நினைத்தவர்களின் எண்ணம் கைகூடும். இதுவரையில் வாழ்க்கையில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வயதுவந்த பிள்ளைகளுடன் கோபமாகப் பேசக்கூடாது. திருமண வயதுவந்த ஆண்- பெண் இருபாலரையும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். அதிகமான கண்காணிப்பு பலன் தரும். வழிதவறிச் செல்லவுள்ளவர்களை நல்வழிப்படுத்தலாம். ஒருசிலருக்கு மத்திய அரசுப்பணி வந்துசேரும். நல்ல இடத்தில் பதவி அமர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு தந்தை சொத்துகள் கிட்டும்.
சனி பகவான் உங்கள் ராசியில் 16-12-2014 வரையில் 12-ல் இருப்பார். அவரின் பார்வை முதல் வீடான மேஷத்தில் விழுகிறது. இதன்மூலம் அவர் நல்ல பொருளாதாரத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
மேலும் சனி பகவான் 19-7-2014 வரையிலும் வக்ரமடைகிறார். இந்தக் காலத்தில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
16-12-2014 வரையிலும் விரயச்சனி என்பதால், உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவேண்டும். எழுபது வயதுக்கு மேற்பட்ட விருச்சிக ராசி அன்பர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் மனக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் நீண்டகாலம் வாழலாம். ஒருசில அரசியல் பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். இருக்கும் பதவியைக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். ஒருசிலர் வழக்கு சம்பந்தமாக அலையக்கூடும்.
நிதானத்தைக் கடைப்பிடித்து, மற்றவர்களிடம் கனிவாக நடந்துகொண்டால் பிரச்சினைகள் எதுவும் வராது. உறவினர்களால் தொல்லை வருவதுடன் அவர்கள் பிரச்சினைக்காக நீங்கள் அலைய வேண்டியது வரும். பட்டு, ஜவுளி வியாபாரம் செய்கிறவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாக வருவார். இப்போது கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக சொன்ன வாக்கை நம்பி தொழில் செய்யக்கூடாது. உங்களுடன் பணிபுரிகின்றவர்களுக்கு நீங்கள் பரிந்துபேசுவதால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கிட சனி பகவானை வணங்கவேண்டும். உடல்நிலையில் அதிக பாதிப்புகளைக் கொடுக்கமாட்டார். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
வேலையிழந்த அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பழைய கடன்கள் பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வரும்.
ராகு பகவான் 21-6-2014 முதல் உங்கள் ராசிக்கு 11-ல் கன்னி வீட்டில் வருகிறார். எப்போதுமே 11-ல் உள்ள ராகு பகவான் வருமானத்தை அதிகரிப்பார். எல்லா பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ஒருசிலர் வெளிநாடு சென்று அதிக லாபத்தைப் பெறுவார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நீங்களே முடிவுசெய்யவேண்டும். அதனால் எந்த நஷ்டமும் வராது. வருமானம் பல வகைகளில் வந்துசேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் வேறு நல்ல இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். அங்கே நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். பங்காளிகள் சண்டை தீர்ந்து ஒற்றுமை கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். நல்ல வரன்களாக அமையும்.
உங்கள் கூட்டாளிகளை உதாசீனம் செய்து ஒதுக்கிவிடாதீர்கள். புதிய கூட்டாளிகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். வழிகாட்டியாக இருந்தவர்களை எப்போதும் மறக்காமல் உங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் காணாமல்போன பொருட்கள் யாவும் கிடைக்கும். தொலைபேசியில் நல்ல செய்திகள் வந்துசேரும். மனைவி, மக்கள் கேட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொடுப்பீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். எல்லா துறைகளிலும் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
இந்த விஜய ஆண்டில் உங்கள் ராசிக்கு 5-ல் கேது உள்ளார். எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பக்குவத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி இப்போது உணர்ந்திருப்பீர்கள். படித்து வேலைதேடும் உங்கள் பிள்ளைகள் இந்த ஆண்டில் நல்ல வேலைகளைப் பெறுவார்கள். ஒருசிலர் மத்திய அரசு வேலைகளுக்குச் செல்வார்கள். பிள்ளைகளின் நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். உங்கள் குடும்பத்தில் நீண்ட காலமாக பிள்ளைகள் வயதுக்கு வராமலிருந்தால், இந்த ஆண்டு குலதெய்வ அருளால் வயதுக்கு வந்துவிடுவார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.
அவர்கள் விலகிச்சென்று வேடிக்கை பார்த்த காலம் இனி வராது. அண்ணன், தம்பி உறவு மேலும் பாசப்பிணைப்போடு வளரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பூர்வீக சொத்துகள் வகையில், பங்காளிகளிடையே இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். ஒருசிலரின் பூர்வீக சொத்துகளில் வம்பு, வழக்கு ஏற்பட்டிருக்கும். இப்போது அந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இதுவரை உங்களை வாட்டி வதைத்துவந்த கடன் சுமை குறையும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்பட்டிருந்த பின்னடைவுகள் சீராகும். போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு உங்கள் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்வீர்கள்.
வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் வேறுநாடு சென்று தொழில்செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். செல்லுகின்ற இடத்தில் மிகவும் விழிப்பாகச் செயல்படவேண்டும். அரசுப் பணியாளர்கள் நியாயமாகச் செயல்பட்டால் மட்டும் பணியிட மாற்றத்தில் நல்ல இடத்தைப் பெறமுடியும். உங்களுக்கு எதிராக இதுவரை சில தீயசக்திகள் செயல்பட்டுவந்தன. அவை விலகிச் செல்லும். சமுதாயத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஒருசிலர் செல்வ வளம் பெற்று முக்கியஸ்தர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. பிரிந்துசென்ற தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள்.
பெண்கள்
இந்த ஆண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 13-6-2014 முதல், இதுவரை தொல்லை கொடுத்துவந்த பிணி, பீடைகள் மாறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமும் நடக்கும். ஒருசிலருக்கு கணவரோடு வெளிநாட்டில் வேலைசெய்யும் பாக்கியம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆண் வாரிசு வேண்டுவோருக்கு ஆண் வாரிசு கிட்டும். உங்களுக்குச் சேரவேண்டிய பழைய பாக்கி கிடைக்கும். இரவல் கொடுத்த அல்லது காணாமல்போன முக்கிய பொருள் திரும்பக்கிடைக்கும். புதிய நகைகள் வாங்கலாம். உங்கள் பெயரில் கணவர் சொத்துகள் வாங்கிக்கொடுக்க வாய்ப்புகள் உண்டு.
மாணவர்கள்
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முந்தைய காலகட்டங்களில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வடைவார்கள். கல்வியில் உயர்நிலையை அடைவார்கள். தான் என்ற அகங்காரத்துடன் செயல்படுபவர்களின் மதிப்பெண் குறையலாம். நன்றாகப் படிப்பீர்கள். ஜூன் வரை கவனச்சிதறல் கூடாது. இந்த காலகட்டத்தில்தான் தேர்வுகள் நடக்கும் என்பதால் நண்பர்களுடன் அரட்டை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தவிர்க்கவேண்டும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
நீங்கள் அதிகமாக உழைக்கவேண்டும். உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அரசு உதவி 13-6-2014-க்குப் பிறகு கிடைக்கும். புதிய தொழில் துவங்குவதைத் தவிர்க்கவேண்டும். பண விஷயத்தில் எந்தக் கஷ்டமும் வராது. அதேநேரத்தில் ஒருசிலர் வியாபாரத்தில் சில விரயங்களைச் சந்திப்பார்கள்.
விவசாயிகள்
விவசாயத்தில் 13-6-2014-க்குமேல் சிறப்புண்டு. மகசூல் நன்றாக இருக்கும். நவீன விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். ஒருசிலர் புதிய நிலம் வாங்குவார்கள். வாங்கும்போது பத்திரத்தை கவனமாகப் படிக்கவேண்டும். டிராக்டர் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். சிலர் ஒன்றுசேர்ந்து கூட்டுப்பண்ணை நடத்தி, அதில் அதிக லாபத்தையும் பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்கள்
13-6-2014 முதல் அரசு ஊழியர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இருக்காது. எதிர்பார்த்த உயர்பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சிறிது முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வு காலம் தாழ்த்தி வந்தாலும் சிறப்பாக வரும். பணிபுரியும் இடத்தில் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். சாதகமான உத்தரவுகள் வரும்.
கலைத்துறையினர்
அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றாலும், இருப்பதைக் கொண்டு சாதித்துவிடுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். போட்டிகள் அதிகம் இருந்தாலும் வாய்ப்புகள் குறையாது. எதையும் நேர்மையாக அணுகி சாதனை படைப்பீர்கள். புதுமுகங்கள் வாய்ப்புகளைப் பெறுவார்கள். தயாரிப்பாளர்கள் குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்து வெற்றிப்படமாக்கி அதிக லாபம் பெறுவார்கள். ஒருசில படங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான நாட்கள் திரையில் ஓடும். மக்கள் ஆதரவு பெருகும்.
அரசியல் பிரமுகர்கள்
லாபஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் உங்களுக்கு அரசியலில் வெற்றியைத் தருவார். எதிரிகளின் தொல்லை விலகும். 13-6-2014 முதல் குரு பகவான் 9-ல் வருவது உங்களுக்கு சிறப்பு தரும். இப்போது அரசியலில் நீங்கள் பெற நினைத்த பதவியைப் பெறுவீர்கள். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். ஒருசிலருக்கு வாரியத்தலைவராகும் யோகமும் உண்டு. எம்.எல்.ஏ.க்களில் ஒருசிலர் அமைச்சராவார்கள்.
75% நன்மை
இந்த ஆண்டு 5 பங்கு ஆதாயம் உண்டு; விரயம் 11 பங்கு. (விரயங்கள் சுபவிரயச் செலவுகளாக வரும்). ஆரோக்கியம் 5 பங்கு, அவஆரோக்கியம் 1 பங்கு, ராஜபூஜிதம் 2 பங்கு, ராஜயோகம் 6 பங்கு. (அரசு வேலை கிட்டும்). சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு. சோதனைகள் வந்தாலும் சாதிக்கலாம்.
விசாகம் மற்றும் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் உண்டு. கூடுதல் லாபம் பெறுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை ஐந்து பங்கு லாபம் உண்டு. இந்த காலகட்டத்தில் சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோக பலனாக மாறும்.
மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சீராக இருக்கும். சேமிப்புகள் உயரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் லாபத்தைப் பெறுவீர்கள்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை 7 பங்கு லாபம் வரும். இது உங்களுக்கு பொற்காலம். வீடு, நகை வாங்க போட்டதிட்டம் நிறைவேறும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை மூன்று பங்கு லாபம் உண்டு. சேமிப்பு உயரும். குடும்பத்தில் தனலாபமும் சௌபாக்கியமும் ஏற்படும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் உண்டு. சிக்கனமாகச் செயல்படவேண்டும். புதிய கடன்கள் ஏற்படாது. வருமானம் சீராகவே உள்ளது.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
ஒவ்வொரு ஞாயிறு அல்லது மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, சிவன் கோவிலிலுள்ள பைரவருக்கு, 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்து போட்டு வர, தீய தாக்கங்கள் குறையும். அல்லது மாதம் ஒருமுறை, ஆலய வாயிலிலுள்ள ஏழை, எளிய பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் அன்னதானம் செய்துவர, மேலும் நன்மைகள் வரும்.
இந்த ஆண்டு பலனை முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்கும். குரு பகவான் 12-6-2014 வரையிலும் மிதுனத்தில் இருப்பார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் இடமாகும். எனவே 12-6-2014 வரையிலும் நீங்கள் அமைதி காக்கவேண்டும். 8-ல் உள்ள குரு பகவானால் வீண் மனவேதனை உருவாகியிருக்கும். 12-6-2014 வரையிலும் பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்படும். நண்பர்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள். அதேநேரம் குருவின் 7-ஆம் இடத்துப் பார்வையால் இடர்ப்பாடுகள் சற்று குறையும். என்றாலும் நீங்கள் எப்போதும் விழிப்பாக இருக்கவேண்டும்.
பொதுத்தொண்டு, அறங்காவலர் பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்களின் குடும்பத்தில் குழப்பம் வரலாம். சமூகத்தில் சிலர் வீண் கெட்டபெயர் எடுப்பார்கள். ஒருசில அரசு ஊழியர்கள் திடீர் இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். ஒருசிலர் செய்யாத தவறுக்காக, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனைகளை அடைவார்கள். இன்னும் சிலர் கையூட்டுப் பெற்று காவல்துறை தண்டனைக்கு ஆளாவார்கள். எனவே அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதைக் கைவிடவேண்டும். சிலருக்கு சமுதாயத்தில் அந்தஸ்து குறைந்து அவமானம் ஏற்படும். எனவே உங்களது ஒவ்வொரு செயல்பாட்டிலும் கவனமாக இருக்கவேண்டும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட மந்தம் 12-6-2014 வரையிலும் இருக்கும். அதுவரை புதிய யுக்திகளைக் கையாளவேண்டும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். புரிந்து வாழ்பவர்களுக்குப் பிரச்சினை எதுவும் வராது. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். 12-6-2014 வரையிலும் குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கிவரவேண்டும். வெளிநாடு செல்ல போட்ட திட்டத்தை சற்று தள்ளிவைக்க வேண்டும். 13-6-2014-க்குப் பிறகு நல்ல நாட்டில் விசா கிடைக்கும். கூடுதல் வருமானத்தோடு பணியாற்றுவீர்கள்.
13-6-2014 வரை உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த குரு பகவான் 9-க்கு வந்துவிடுகிறார். “மாட்டிக் கொண்டவருக்கு 8-ல் சனி; ஓடிப்போனவருக்கு (வெளிமாநிலம் அல்லது வெளிநாடு சென்றவருக்கு) 9-ஆம் இடத்தில் வியாழன்’ என்று சொல்வார்கள். ஒன்பதாம் வீட்டில் குரு வரும்போது நீங்கள் எத்தகைய பலன்களை அடையவுள்ளீர்கள் என்று காண்போம்.
13-6-2014 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் வரும்போது, உங்கள் வாழ்வில் வசந்தகாலம் தொடங்குகின்றது. குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடத்தில்- சந்திரன் வீட்டில் (கடகத்தில்) உச்சம்பெறுகின்றார். தனது சொந்தவீடான மீனத்தை 9-ஆம் பார்வை பார்ப்பது விசேஷம். ஏதாவது ஒரு சொத்தை கூடுதல் விலைக்கு விற்று, ராஜயோகமான வாழ்க்கை வாழ்வீர்கள். மனைவிமூலம் தனலாபம் கிடைக்கும். தொழில்வகையில் ஏற்பட்ட விரோதம் நீங்கி, ஒற்றுமை நிலவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகள் கூடுதலாக விவசாயம் செய்து நல்ல மகசூலை அடைவார்கள். ஒருசிலர் புதிய வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும்.
மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். உயர்கல்விக்காக வெளிநாடு சென்று படிக்க நினைத்தவர்களின் எண்ணம் கைகூடும். இதுவரையில் வாழ்க்கையில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். வயதுவந்த பிள்ளைகளுடன் கோபமாகப் பேசக்கூடாது. திருமண வயதுவந்த ஆண்- பெண் இருபாலரையும் கண்காணிக்க வேண்டும். அவர்கள் காதல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். அதிகமான கண்காணிப்பு பலன் தரும். வழிதவறிச் செல்லவுள்ளவர்களை நல்வழிப்படுத்தலாம். ஒருசிலருக்கு மத்திய அரசுப்பணி வந்துசேரும். நல்ல இடத்தில் பதவி அமர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு தந்தை சொத்துகள் கிட்டும்.
சனி பகவான் உங்கள் ராசியில் 16-12-2014 வரையில் 12-ல் இருப்பார். அவரின் பார்வை முதல் வீடான மேஷத்தில் விழுகிறது. இதன்மூலம் அவர் நல்ல பொருளாதாரத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
மேலும் சனி பகவான் 19-7-2014 வரையிலும் வக்ரமடைகிறார். இந்தக் காலத்தில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
16-12-2014 வரையிலும் விரயச்சனி என்பதால், உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவேண்டும். எழுபது வயதுக்கு மேற்பட்ட விருச்சிக ராசி அன்பர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் மனக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் நீண்டகாலம் வாழலாம். ஒருசில அரசியல் பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். இருக்கும் பதவியைக் கொண்டு சிறப்பாக வாழவேண்டும். ஒருசிலர் வழக்கு சம்பந்தமாக அலையக்கூடும்.
நிதானத்தைக் கடைப்பிடித்து, மற்றவர்களிடம் கனிவாக நடந்துகொண்டால் பிரச்சினைகள் எதுவும் வராது. உறவினர்களால் தொல்லை வருவதுடன் அவர்கள் பிரச்சினைக்காக நீங்கள் அலைய வேண்டியது வரும். பட்டு, ஜவுளி வியாபாரம் செய்கிறவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாக வருவார். இப்போது கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக சொன்ன வாக்கை நம்பி தொழில் செய்யக்கூடாது. உங்களுடன் பணிபுரிகின்றவர்களுக்கு நீங்கள் பரிந்துபேசுவதால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கிட சனி பகவானை வணங்கவேண்டும். உடல்நிலையில் அதிக பாதிப்புகளைக் கொடுக்கமாட்டார். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
வேலையிழந்த அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பழைய கடன்கள் பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வரும்.
ராகு பகவான் 21-6-2014 முதல் உங்கள் ராசிக்கு 11-ல் கன்னி வீட்டில் வருகிறார். எப்போதுமே 11-ல் உள்ள ராகு பகவான் வருமானத்தை அதிகரிப்பார். எல்லா பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ஒருசிலர் வெளிநாடு சென்று அதிக லாபத்தைப் பெறுவார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நீங்களே முடிவுசெய்யவேண்டும். அதனால் எந்த நஷ்டமும் வராது. வருமானம் பல வகைகளில் வந்துசேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்கள் திடீர் பணக்காரர்கள் ஆவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் வேறு நல்ல இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். அங்கே நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். பங்காளிகள் சண்டை தீர்ந்து ஒற்றுமை கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த மங்கள நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். நல்ல வரன்களாக அமையும்.
உங்கள் கூட்டாளிகளை உதாசீனம் செய்து ஒதுக்கிவிடாதீர்கள். புதிய கூட்டாளிகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். வழிகாட்டியாக இருந்தவர்களை எப்போதும் மறக்காமல் உங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் காணாமல்போன பொருட்கள் யாவும் கிடைக்கும். தொலைபேசியில் நல்ல செய்திகள் வந்துசேரும். மனைவி, மக்கள் கேட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொடுப்பீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும். எல்லா துறைகளிலும் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
இந்த விஜய ஆண்டில் உங்கள் ராசிக்கு 5-ல் கேது உள்ளார். எந்த விஷயத்தையும் ஆராய்ந்து பக்குவத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி இப்போது உணர்ந்திருப்பீர்கள். படித்து வேலைதேடும் உங்கள் பிள்ளைகள் இந்த ஆண்டில் நல்ல வேலைகளைப் பெறுவார்கள். ஒருசிலர் மத்திய அரசு வேலைகளுக்குச் செல்வார்கள். பிள்ளைகளின் நலன் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். உங்கள் குடும்பத்தில் நீண்ட காலமாக பிள்ளைகள் வயதுக்கு வராமலிருந்தால், இந்த ஆண்டு குலதெய்வ அருளால் வயதுக்கு வந்துவிடுவார்கள். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள்.
அவர்கள் விலகிச்சென்று வேடிக்கை பார்த்த காலம் இனி வராது. அண்ணன், தம்பி உறவு மேலும் பாசப்பிணைப்போடு வளரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பூர்வீக சொத்துகள் வகையில், பங்காளிகளிடையே இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். ஒருசிலரின் பூர்வீக சொத்துகளில் வம்பு, வழக்கு ஏற்பட்டிருக்கும். இப்போது அந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். இதுவரை உங்களை வாட்டி வதைத்துவந்த கடன் சுமை குறையும். கொடுக்கல்- வாங்கலில் ஏற்பட்டிருந்த பின்னடைவுகள் சீராகும். போட்டியாக இருந்துவந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு உங்கள் தொழிலை மேலும் விரிவாக்கம் செய்வீர்கள்.
வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் வேறுநாடு சென்று தொழில்செய்ய போட்ட திட்டம் நிறைவேறும். செல்லுகின்ற இடத்தில் மிகவும் விழிப்பாகச் செயல்படவேண்டும். அரசுப் பணியாளர்கள் நியாயமாகச் செயல்பட்டால் மட்டும் பணியிட மாற்றத்தில் நல்ல இடத்தைப் பெறமுடியும். உங்களுக்கு எதிராக இதுவரை சில தீயசக்திகள் செயல்பட்டுவந்தன. அவை விலகிச் செல்லும். சமுதாயத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். ஒருசிலர் செல்வ வளம் பெற்று முக்கியஸ்தர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமையுண்டு. பிரிந்துசென்ற தம்பதியர்கள் ஒன்றுசேர்வார்கள்.
பெண்கள்
இந்த ஆண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 13-6-2014 முதல், இதுவரை தொல்லை கொடுத்துவந்த பிணி, பீடைகள் மாறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். திருமணமும் நடக்கும். ஒருசிலருக்கு கணவரோடு வெளிநாட்டில் வேலைசெய்யும் பாக்கியம் ஏற்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஒருசிலருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஆண் வாரிசு வேண்டுவோருக்கு ஆண் வாரிசு கிட்டும். உங்களுக்குச் சேரவேண்டிய பழைய பாக்கி கிடைக்கும். இரவல் கொடுத்த அல்லது காணாமல்போன முக்கிய பொருள் திரும்பக்கிடைக்கும். புதிய நகைகள் வாங்கலாம். உங்கள் பெயரில் கணவர் சொத்துகள் வாங்கிக்கொடுக்க வாய்ப்புகள் உண்டு.
மாணவர்கள்
கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முந்தைய காலகட்டங்களில் இருந்து வந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வடைவார்கள். கல்வியில் உயர்நிலையை அடைவார்கள். தான் என்ற அகங்காரத்துடன் செயல்படுபவர்களின் மதிப்பெண் குறையலாம். நன்றாகப் படிப்பீர்கள். ஜூன் வரை கவனச்சிதறல் கூடாது. இந்த காலகட்டத்தில்தான் தேர்வுகள் நடக்கும் என்பதால் நண்பர்களுடன் அரட்டை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தவிர்க்கவேண்டும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
நீங்கள் அதிகமாக உழைக்கவேண்டும். உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் அரசு உதவி 13-6-2014-க்குப் பிறகு கிடைக்கும். புதிய தொழில் துவங்குவதைத் தவிர்க்கவேண்டும். பண விஷயத்தில் எந்தக் கஷ்டமும் வராது. அதேநேரத்தில் ஒருசிலர் வியாபாரத்தில் சில விரயங்களைச் சந்திப்பார்கள்.
விவசாயிகள்
விவசாயத்தில் 13-6-2014-க்குமேல் சிறப்புண்டு. மகசூல் நன்றாக இருக்கும். நவீன விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். ஒருசிலர் புதிய நிலம் வாங்குவார்கள். வாங்கும்போது பத்திரத்தை கவனமாகப் படிக்கவேண்டும். டிராக்டர் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். சிலர் ஒன்றுசேர்ந்து கூட்டுப்பண்ணை நடத்தி, அதில் அதிக லாபத்தையும் பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்கள்
13-6-2014 முதல் அரசு ஊழியர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இருக்காது. எதிர்பார்த்த உயர்பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சிறிது முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வு காலம் தாழ்த்தி வந்தாலும் சிறப்பாக வரும். பணிபுரியும் இடத்தில் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள். சாதகமான உத்தரவுகள் வரும்.
கலைத்துறையினர்
அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கவில்லையென்றாலும், இருப்பதைக் கொண்டு சாதித்துவிடுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். போட்டிகள் அதிகம் இருந்தாலும் வாய்ப்புகள் குறையாது. எதையும் நேர்மையாக அணுகி சாதனை படைப்பீர்கள். புதுமுகங்கள் வாய்ப்புகளைப் பெறுவார்கள். தயாரிப்பாளர்கள் குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்து வெற்றிப்படமாக்கி அதிக லாபம் பெறுவார்கள். ஒருசில படங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலான நாட்கள் திரையில் ஓடும். மக்கள் ஆதரவு பெருகும்.
அரசியல் பிரமுகர்கள்
லாபஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் உங்களுக்கு அரசியலில் வெற்றியைத் தருவார். எதிரிகளின் தொல்லை விலகும். 13-6-2014 முதல் குரு பகவான் 9-ல் வருவது உங்களுக்கு சிறப்பு தரும். இப்போது அரசியலில் நீங்கள் பெற நினைத்த பதவியைப் பெறுவீர்கள். தலைமையால் பாராட்டப்படுவீர்கள். ஒருசிலருக்கு வாரியத்தலைவராகும் யோகமும் உண்டு. எம்.எல்.ஏ.க்களில் ஒருசிலர் அமைச்சராவார்கள்.
75% நன்மை
இந்த ஆண்டு 5 பங்கு ஆதாயம் உண்டு; விரயம் 11 பங்கு. (விரயங்கள் சுபவிரயச் செலவுகளாக வரும்). ஆரோக்கியம் 5 பங்கு, அவஆரோக்கியம் 1 பங்கு, ராஜபூஜிதம் 2 பங்கு, ராஜயோகம் 6 பங்கு. (அரசு வேலை கிட்டும்). சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு. சோதனைகள் வந்தாலும் சாதிக்கலாம்.
விசாகம் மற்றும் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் உண்டு. கூடுதல் லாபம் பெறுவீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை ஐந்து பங்கு லாபம் உண்டு. இந்த காலகட்டத்தில் சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோக பலனாக மாறும்.
மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சீராக இருக்கும். சேமிப்புகள் உயரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் லாபத்தைப் பெறுவீர்கள்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை 7 பங்கு லாபம் வரும். இது உங்களுக்கு பொற்காலம். வீடு, நகை வாங்க போட்டதிட்டம் நிறைவேறும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை மூன்று பங்கு லாபம் உண்டு. சேமிப்பு உயரும். குடும்பத்தில் தனலாபமும் சௌபாக்கியமும் ஏற்படும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் உண்டு. சிக்கனமாகச் செயல்படவேண்டும். புதிய கடன்கள் ஏற்படாது. வருமானம் சீராகவே உள்ளது.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
ஒவ்வொரு ஞாயிறு அல்லது மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, சிவன் கோவிலிலுள்ள பைரவருக்கு, 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்து போட்டு வர, தீய தாக்கங்கள் குறையும். அல்லது மாதம் ஒருமுறை, ஆலய வாயிலிலுள்ள ஏழை, எளிய பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண்பொங்கல் அன்னதானம் செய்துவர, மேலும் நன்மைகள் வரும்.
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-மீனம்
மீனம்: பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு…….)
உங்கள்
இராசிநாதன் குரு பகவான், வெகு
அமர்க்களமாக கேந்திரத்தில் அமர்ந்து விட்டார். சந்திரனோடு தனாதிபதி செவ்வாய் உள்ளார். பொன், பொருள் தேடி
வரும். வாக்கு பலிதம் உண்டாகும்.
குடும்பாதிபதி 7-ல் இருப்பதால், குடும்பத்தில்
இத்தனை நாட்கள் நடைபெறாமல் இருந்த
சுபநிகழ்ச்சிகள் – திருமணங்கள் தடையில்லாமல் நடைப்பெறும். அம்பாள் அனுகிரகத்தால் சுபங்கள்
பலர் மெச்சும்படி அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு கைமேல் நல்ல பலன்
கிடைக்கும். புதிய தொழில் சிலருக்கு
அமையும். சுகஸ்தானத்தில் குரு. அந்த வீட்டுக்குரிய
புதன் உங்கள் இராசியில் இருப்பதால்,
உடலில் இருந்து வந்த ரோகங்கள்
அத்தனையும் விலகிவிடும். மனக்குழப்பம் தீரும். யோகமான வாழ்க்கை
அமையும்.
12-6-2014 வரை முக்கிய கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் இடமான மிதுனத்தில் இருப்பார். 4-ஆம் இடத்து குரு மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். என்றாலும் அவர் உங்கள் ராசிநாதன் என்பதால், அதிகபட்ச கெடுபலன்களைத் தரமாட்டார். அது மட்டுமல்ல; குரு பகவான் 4-ல் உள்ள இந்த காலகட்டத்தில் ஒருசிலர் வேறு நகரம் செல்வார்கள்.12-6-2014 வரையிலும் மீன ராசி அன்பர்களில் பெரும்பாலானோர் சிரமத்தை அடைய நேரிடும். நல்லவர்களாக வாழ்ந்துவரும் அன்பர்கள் கெடுதல் எதையும் அடையமாட்டார்கள். தீய வாழ்க்கை வாழ்பவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக சொந்த இருப்பிடத்தைவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். சிலருக்கு பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக இருக்காது. உறவினர் மத்தியிலும் நல்ல மதிப்பு இருக்காது.
நல்லவர்களாகவே வாழும் மீன ராசி அன்பர்கள் குரு 4-ல் உள்ள இந்த காலகட்டத்தில் வேறு நகரம் செல்வார்கள். அடகு வைத்த நகைகளை மீட்பார்கள். ஒருசிலர் நூதன தொழில் தொடங்குவார்கள். அரசு ஊழியர்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதலில் செல்வார்கள். மாறுதலில் சென்றாலும் வசதி வாய்ப்போடு வாழ்வார்கள். கையூட்டு பெறுகின்ற அரசு ஊழியர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளா வார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனங்களில் வேகமாகச் செல்லக்கூடாது. சிறு விபத்தை சந்திக்க நேரும். பொதுவாக மீன ராசி அன்பர்கள் எல்லா காரியங்களிலும் சற்று யோசித்துச் செயல்பட வேண்டும். தேவையற்றவர்களின் நட்பை உதறிவிட வேண்டும். தினசரி தட்சிணாமூர்த்தியை வணங்கிவர நன்மையுண்டு.
குரு பகவான் 13-6-2014 முதல் மிதுன ராசியிலிருந்து, உங்கள் ராசிக்கு 5-ஆம் இடமான கடகராசிக்குச் செல்வார். குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வருகின்றார். அதுமுதல் குலதெய்வ அருளும் குரு பகவான் அருளும் உங்களுக்குக் கிடைக்கிறது. ஒருசிலருக்கு பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினைகள் இனிதாக நிறைவேறும். சிலர் பூர்வீக சொத்தில் புதிய வீடு கட்டுவார்கள். சிலர் பூர்வீக வீட்டை மராமத்து செய்வார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறவர்கள், வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு ஒன்று சேர்வார்கள். குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக அதிகம் உழைப்பீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் வந்துசேரும். சிலர் அரசு மானியத்துடன் வங்கிக் கடன் பெறுவார்கள்.
அரசியல் பிரமுகர்களுக்கு இதுவரை எட்டாக் கனியாய் இருந்துவந்த பதவி வலிய வந்துசேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். இதுவரை வாட்டி வதைத்துவந்த நோய் குணமாகும். பழைய கடன்பாக்கிகள் பைசலாகும். வரவேண்டிய பாக்கிகளும் வந்துசேரும். போட்டி வியாபாரிகள் விலகிச் செல்வார்கள். இளைய சகோதர- சகோதரிகளில் நல்ல லாபத்தை அடைவீர்கள். ஒருசிலர் வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். உயர்பதவிக்கான தேர்வெழுதியவர்கள் வெற்றிபெறுவார்கள். கடகத்தில் குரு பகவான் வரும் காலம் உங்களுக்கு ஆறுதலான காலம். குரு பகவானின் 5-ஆம் இடத்துப் பார்வையும், 7-ஆம் இடத்துப் பார்வையும் சாதகமாக அமையும். 5-ஆம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 9-ஆம் வீடான விருச்சிகத்தில் விழும். அதன்மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்கலாம். எனவே நீங்கள் 13-6-2014 முதல் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
16-12-2014 வரையில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் உள்ளார். அஷ்டமத்துச் சனி நன்மைகள் தராது. சனி பகவான் உங்கள் முயற்சியில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர்செல்வார்கள். இந்த ஆண்டு முடியும்வரை சனி பகவானின் நிலை இதே இடத்தில்தான் உள்ளது. எதையும் ஆலோசித்துச் செய்யவேண்டும். எடுத்தேன் கவிழ்தேன் என்றில்லாமல் மிகவும் நிதானமாகச் செயல்படவேண்டும்.
சனி பகவான் 8-ல் உள்ள இந்த காலகட்டத்தில் சிலருக்கு உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதித்து, பிறகு மருத்துவத்தின் உதவியால் காப்பாற்றப்படுவார். சிலர் எந்த ஒரு வருவாயும் இல்லாமல் தவிக்கநேரும். இரவு நேரத்தில் தூக்கம் வராது. சிலரின் விலையுயர்ந்த பொருட்கள் களவுபோக வாய்ப்புள்ளது; எச்சரிக்கை தேவை.
அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். அதேபோல பதவி உயர்வும் வந்துசேரும். முக்கியமான கடன்களை அடைப்பீர்கள். சனி பகவான் 4-3-2014 முதல் 19-7-2014 வரையில் வக்ரத்தில் இருப்பார். எனவே கெடுதல் எதுவும் வராது.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ல் அமர்வார். அப்போது உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தங்க நகை வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த தீயவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். 16-12-2014 முதல் சனி பகவான் உங்களுக்கு நல்ல சிந்தனைகளை உருவாக்கித் தருவார்.
21-6-2014 வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் (துலாமில்) அமர்ந்து தடை, தாமதங்களை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்துவார். வெளியூர் பயணத்தை அடிக்கடி உருவாக்குவார். ஆனால் ராகுமீது குருவின் பார்வை விழுவதால், அதிக கெடுதல் வராது.
21-6-2014 முதல் ராகு பகவான் துலா ராசியிலிருந்து இடம்பெயர்ந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். குடும்ப ஸ்தானத்தில் (7-ல்) ராகு இருக்கும்போது குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகளை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். ஒருசிலருக்கு குடியிருக்கும் ஊரையோ, வீட்டையோ மாற்றுவார். இப்போது புதிய பொருளாதார வாய்ப்புகள் வந்துசேரும். பொருளாதாரநிலை உயரும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். அந்நிய மதத்தவர், அந்நிய மொழியினரால் பொருளாதாரநிலை உயரும். அவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்கிறவர்கள் நல்ல சம்பளத்தையும் லாபத்தையும் பெறுவார்கள். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டுவந்த நிலை மாறும். குடும்பத்தில் பாகப்பிரிவினை சம்பந்தமான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். மலைபோல்வந்த துயரங்கள் நீங்கும். மனைவியிடம் அன்போடு பேசினால் வளமாக வாழலாம். எனவே குடும்பத்தில் குதர்க்கமான பேச்சுகளைப் பேசாதீர்கள். நோயின் தாக்கம் குறையும். 21-6-2014 முதல் உங்கள் மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உறவினர்களாலும் நன்மையுண்டு. உங்களை ஏமாற்றியவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள்.
20-6-2014 வரை கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் இருப்பார். பொதுவாக 2-ல் உள்ள கேது தேசாந்திரியாக்குவார். ஒருபொழுதும் விடியாத பிரச்சினைகளோடு வாழவைப்பார். பொருள் விரயத்தையும், பகைவர்கள் தொல்லையையும் தருவார். 21-6-2014-ல் அவர் இடம்பெயர்ந்து உங்கள் ராசிக்கு வருகிறார். எனவே நீங்கள் நிதானமாகச் செயல்படவேண்டும். உங்கள் முயற்சிகளில் தடை வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படலாம். அதனால் கூடுதல் செலவுகள் வந்து சேரும். இதற்கெல்லாம் காரணம், உங்களிடமுள்ள தீய பழக்கங்களே என்பதை உணர்வீர்கள். தவறை திருத்திக் கொண்டவர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்.
கேது பகவான் உங்கள் ராசியில் இருக்கும்போது, உங்கள் செயல்களில் திட்டமிடுதல் இருக்கவேண்டும். கெடுபலன்கள் வராது. வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழவேண்டும். ஜாமீன் கையெழுத்துப் போடக்கூடாது. விலையுயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும். அரசு ஊழியர்களில் ஒருசிலர் மேலதிகாரிகளின் தண்டனைக்கு ஆட்படுவார்கள். உடன்பிறந்தவர்களால் சுபகாரியங்கள் நடக்கும். எனினும் அவர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். பொருளாதாரத் தட்டுப்பாடு வராது. சகோதர- சகோதரிகளிடையே பலமான கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். மீன ராசி அன்பர்கள் கேது பகவான் தங்கள் ராசியில் இருக்கும்வரை அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். நேர்மையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எப்போதும் எந்த பாதிப்பும் வராது. அதற்கு குரு பகவான் துணையிருப்பார். எனவே இந்த ஜய வருடம் உங்களுக்கு நல்ல திருப்பத்தை உண்டாகும்.
பெண்கள்
குரு பகவானின் 7-ஆம் பார்வை திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகத்தைக் கொடுக்கும். ஆண்டின் பிற்பகுதியில் நகை, பணம் சேரும். கணவன்- மனைவியிடையே இணக்கமான போக்கு இருக்கும். வேலைசெய்யும் பெண்கள் 13-6-2014-க்குப் பிறகு அரசு சலுகைகளை எதிர்பார்க்கலாம். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உடன்பிறந்தோரிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் ஆசைப்பட்ட பொன், பொருள்களை வாங்கிச்சேர்ப்பீர்கள்.
மாணவர்கள்
13-6-2014 முதல் குரு பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளார். எனவே கல்வியில் உயர்வீர்கள். நீங்கள் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர்வதற்கு இடம் கிடைக்கும். அதிக கவனம் செலுத்துபவர்கள் மெரிட்டில் பாஸ் செய்வார்கள்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் லாபத்துக்குக் குறைவராது. வருமானம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலர் வியாபார விஷயமாக வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டும். அதிக முதல் போடாமல் அறிவைப் பயன்படுத்தி முன்னேற வழிவகை காணவேண்டும். அரசு வகையில் இருந்துவந்த பிரச்சினைகள் மறையும். அனுகூலமான போக்கு காணப்படும். வாசனை திரவியம், அழகுசாதனப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். மற்ற வியாபாரம் செய்கிறவர்கள் சராசரியான வருமானத்தைப் பெறுவார்கள். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள்.
விவசாயிகள்
விவசாயிகள் இந்த ஆண்டு நவீன கருவிகளை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். 13-6-2014-க்குப் பிறகு டிராக்டர் போன்ற விவசாயக் கருவிகளை வாங்குவீர்கள். இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும். பணப்பயிர்கள் கூடுதல் லாபத்தைத் தரும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் லாபம் பெறலாம். மாடு, கன்றுகள் வளர்ப்போர் நல்ல லாபத்தை அடைவார்கள். பால் உற்பத்தியில் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் தங்கள் உழவுப் பணியை சிறப்பாகச் செய்வார்கள்.
அரசுப் பணியாளர்கள்
வேலையில் இதுவரை இருந்துவந்த பின்தங்கிய நிலை மாறும். 13-6-2014 முதல் பல சிறப்பான பலன்களைக் காணலாம். கூடுதல் பளு குறையும். முக்கிய கிரகங்கள் உங்களை இடம்மாற்றி விடும் என்பதால், அதனையே உங்களுக்கு சாதகமாக்கி, விரும்பிய இடத்துக்கு மாறுதலைப் பெற்றுவிடுவீர்கள். சில சமயங்களில் கெட்டதும்கூட நல்லதற்காகவே வருகிறது. உங்கள் ஆற்றல் தொடர்ந்து மேம்படும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வும் பதவி உயர்வும் உண்டு.
கலைத்துறையினர்
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். 13-6-2014-க்குமேல் வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்துசேரும். புதிய படம் ஒப்பந்தமாகும். படம் வெளிவந்து நல்ல வசூலை அடையும். கலைத்துறையினருக்கு இந்த ஜய வருடம் பொற்காலம்.
அரசியல் பிரமுகர்கள்
நீங்கள் செய்த பொதுத்தொண்டு தலைமைக்குத் தெரியவரும். தலைமையால் தனிப்பட்ட முறையில் பாராட்டப்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்துசேரும். தேர்தல் களம் உங்களுக்கு இப்போது சாதகமாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி வெற்றியைக் காண்பீர்கள்.
80% நன்மை
இந்த ஆண்டு நீங்கள் 80 சதவிகித லாபத்தைப் பெறுவீர்கள். 8 பங்கு லாபம், விரயம் 2 பங்கு, ஆரோக்கியம் 3 பங்கு, அவஆரோக்கியம் 2 பங்கு, ராஜபூஜிதம் 8 பங்கு, ராஜயோகம் 6 பங்கு, 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம் என்ற அமைப்பில் உள்ளது. பொதுவாக அஷ்டமத்துச் சனியின் கழிவு காலத்தில், 1-6-2014-க்குமேல் 16-12-2014-க்குள் அதிகமான லாபத்தைத் தரும்.
பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நீங்கள் ஏழு பங்கு லாபத்தைப் பெறுவீர்கள். உங்கள் சேமிப்பை உயர்த்திக்கொள்வீர்கள். கூடுதலான வருமானம் வரும் இந்தக் காலம் உங்களுக்கு யோகமான காலம்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானக் குறைவு இருக்கும். எனவே சிக்கனமாகச் செயல்படவேண்டும். காரிய பங்கமும் அலைச்சலும் ஏற்படும்.
மார்கழி முதல் பங்குனி வரை நான்கு பங்கு லாபம் வருகின்றது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப உறுப்பினர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்கமுடியும். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குடும்பத்தில் சௌக்கியமும் தனலாபமும் ஏற்படும். எதிர்கால யோகமுண்டு. தடை, தாமதங்கள் நீங்கும். சேமிப்பு உயரும்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் ஓரளவுதான் வரும். எனவே சிக்கனத்தைக் கையாளவேண்டும். கூடுதல் செலவுகள் வராது. மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் கூடுதலாக வரும். இப்பொழுது அனைத்து வகையிலும் சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். எதிர்காலம் யோகமாக இருக்கும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
பிரதோஷ நாளில் நந்தி பகவானை வணங்கி வந்தால் நன்மையுண்டு. அஷ்டமி திதியில் பைரவரை வணங்கி வருதல் நன்மையைத் தரும். குலதெய்வத்தை வணங்கிவர லாபம் பெருகும்.
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-கும்பம்
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு…….)
உங்கள்
இராசிநாதன் சனி 9-ல் அமர்ந்து
விட்டார். சந்திரன், செவ்வாயோடு இணைந்து நற்பலனை தருவார்.
8-ல் அதாவது, அன்றைய தினம்
“சந்திராஷ்டமம்”
ஆயிற்றே என்று நீங்கள் நினைக்கலாம்.
6-க்குரியவன் 8-ல் மறைவது நன்மையே
செய்யும். ஆகவே கவலை இல்லை.
ஜென்மத்தில் சுக்கிரன் உள்ளார். அதனால் உங்களுக்கு திருமண
வாழ்க்கை அமையும். குடும்பத்தில் புதன் அமைந்ததால், சுபகாரியங்கள்
செய்து வைப்பார். பாக்கியத்தில் சனி, இராகு. சொத்துக்கள்
விஷயத்தில் பார்த்து வாங்கவும். சில பிரச்னைகள் தலை
தூக்கும். எச்சரிக்கை தேவை. கல்வி துறையில்
முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சற்று
பிரச்சனை உருவாகும். ஆகவே நிதானம், கவனம்
தேவை. லாபத்தை குரு பார்வை
செய்வதால், தொல்லைகள் அகலும்.
குரு பகவான் 12-6-2014 வரை உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தில் உள்ளார். இங்கு அவர் பல்வேறு நன்மைகளைத் தந்துகொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம்போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும். இதனால் வாழ்க்கையில் வளம்காணலாம். இதுதவிர குருவின் 5-ஆம் இடத்துப் பார்வையும், 7-ஆம் இடத்துப் பார்வையும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
குரு பகவான் சஞ்சரிக்கும் 5-ஆம் இடம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். எனவே உங்களுக்கு குலதெய்வ அருளும், குரு பகவான் அருளும் கிடைக்கின்றது. பூர்வீக சொத்தில் ஒருசிலருக்கு இருந்துவந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினைகள் இனிதாக நிறைவேறும். ஒருசிலர் பூர்வீகத்தில் புதிய வீடு கட்டுவார்கள். சிலர் பூர்வீக வீட்டை மராமத்து செய்வார்கள். பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். விவாகரத்து போன்ற வழக்குகளை சந்தித்து வருகிறவர்கள், வழக்குகளை விலக்கிக்கொண்டு ஒன்றுசேர்வார்கள்.
குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக நீங்கள் அதிகம் உழைப்பீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் வந்துசேரும். ஒருசிலர் அரசு மானியத்துடன் வங்கிக்கடனைப் பெறுவார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு எட்டாக் கனியாக இருந்துவந்த பதவி வலிய வந்துசேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மரியாதையும் உருவாகும். இதுவரை வாட்டி வதைத்துவந்த நோய் குணமாகும். பழைய கடன் பாக்கிகள் பைசலாகும். உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகளும் வந்துசேரும். போட்டி வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். உயர்பதவிக்காக எழுதிய தேர்வில் வெற்றியடைந்து, பதவிக்கான உத்தரவையும் பெறுவார்கள்.
குரு பகவான் 13-6-2014 முதல் உங்கள் ராசிக்கு 6-ல் (கடக வீட்டில்) சஞ்சரிக்கிறார். 6-ஆம் இடமென்பது எதிரி, கடன், நோய் ஸ்தானம். ஆனால் இது உங்கள் ராசியை பாதிக்காது. ஏனெனில், குரு பகவான் 9-ஆம் பார்வையாகத் தன் சொந்தவீட்டைப் பார்க்கிறார். குரு ஒரு ராசியில் அமர்ந்து தன் சொந்தவீட்டைப் பார்த்தால், அதிகமாக பாதிக்கமாட்டார். சுய ஜாதகத்தில் குரு பகவான் சாதகமாக இருக்கப் பிறந்த கும்ப ராசி அன்பர்கள் நல்ல லாபத்தையே அடைவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை எச்சரிக்கையாகச் செய்யவேண்டும். ஒருசிலருக்கு பணியில் குற்றம் ஏற்பட்டு, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனைகளை அடையநேரும். வங்கியில் கடன்பெற்றிருந்தால், அதனைத் திரும்பச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படலாம்.
குரு பகவான் 6-ல் உள்ள காலம்- அதாவது 13-6-2014 முதல் வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். ஒருசிலருக்கு கை, கால்களில் கட்டுப்போடும் நிலை ஏற்படும். எனவே நடக்கும்போதுகூட மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். சிறு விபத்துகள் வருவதைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வதில் தாமதம் ஏற்படும்.
16-12-2014 வரையிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சாதகமற்ற நிலையிலுள்ளார். என்றாலும், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் துலா ராசியில் அமர்ந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளன. 3-ஆம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். 7-ஆம் இடத்துப் பார்வையால் காரிய அனுகூலமும், பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் ஏற்படும். 10-ஆம் இடத்துப் பார்வையால் பகைவர்களின் சதியை முறியடிப்பீர்கள். உங்களது ஆற்றல் மேம்படும். உங்களுக்குப் பலவகையிலும் மதிப்பும் மரியாதையும் தருவார்கள்.
உங்கள் ராசிக்கு 9-ல் உள்ள சனி பகவான் எப்போதும் எதிர்பாராத நன்மைகளை வழங்குவார். அரசியல்வாதிகளுக்கு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை மாறும். புதிய மாற்றங்கள் ஏற்படும். எலக்ட்ரானிக் துறையில் படித்தவர்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிட்டும். தங்க நகை வியாபாரம் செய்கிறவர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். தீயவர்கள், நல்லவர்கள்போல பழகிவருவார்கள். இனிய வார்த்தைகளைக் கூறி, உங்கள் சேமிப்புகளை லாபமில்லாத வகையில் முடக்கப் பார்ப்பார்கள். உங்கள் வசமுள்ள கையிருப்புகளை மிகவும் எச்சரிக்கையாக- பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் தொல்லைகள் வந்து நீங்கும்.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் வருகின்றார். அதனால் ஒருசில அரசு ஊழியர்கள் இடமாற்றத்தைச் சந்திப்பார்கள். ஒருசிலர் கட்டாய ஓய்வில் செல்வார்கள். லாகிரி வஸ்து விற்பனை செய்கிறவர்கள், உற்பத்தியாளர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலருக்கு உடல்நலக் குறைவுகள் உண்டாகலாம். சனி 10-ல் வருவது நன்மைகளைத் தரும் என்றாலும், நீங்கள் எச்சரிக்கையாக வாழவேண்டும்.
ராகு பகவான் 21-6-2014-ல் கன்னி ராசிக்கு வருவார். இது உங்கள் ராசிக்கு 8-ஆம் வீடு. நீங்கள் சற்று கவனமுடன் காலத்தைக் கழிக்கவேண்டும். சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் உள்ளவர்கள் ஓரளவு நன்மைகளை அடைவார்கள். அப்படி இல்லாதவர்களுக்கு, சற்று கெடுதலான பலன்கள் நடக்கலாம். கும்ப ராசி அன்பர்கள் 8-ல் ராகு உள்ள இந்த நேரத்தில் வாகனம் வாங்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும். மிகவும் நிதானத்துடன் தெய்வ பக்தியுடன் நடந்தால் கெட்ட பலன்கள் அகலும்.
பொதுவாக 8-ல் உள்ள ராகு அளவில்லாத பொருட்செல்வத்தைத் தருவார். நல்லதே நினைத்து வாழும் ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வரன்கள் அமையும். அரசுப் பணியில் உள்ளவர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலில் செல்வார்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் கூடும்.
விவசாயம் சார்ந்த தொழில் செய்கிறவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். பிள்ளைகள் வெளிநாடு சென்று பொருளீட்ட போட்ட திட்டம் நிறைவேறும். ஏற்கெனவே வெளிநாடு சென்றுள்ளவர்கள் இன்னும் அதிகமான சம்பளத்துடன்கூடிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். 8-ல் உள்ள ராகு பகவான் வயதானவர்களுக்கு, நரம்பு சம்பந்தப்பட்ட தளர்வுகளைத் தருவார். பிரிந்துசென்ற கணவன்- மனைவி ஒன்றுசேர்வார்கள். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் ஒருசிலருக்கு வந்துசேரும்.
உறவினர் வகையில் மனக்கசப்புகள் ஏற்படும். ராகு பகவான் 8-ல் உள்ள இந்த நேரத்தில் நல்ல பலன்களை அடைந்திட, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) பைரவருக்கு, 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்துப் போடவேண்டும். இதேபோல ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் வழிபடவேண்டும்.
21-6-2014 முதல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் (மீன வீட்டில்) வருவார். குடும்ப ஸ்தானத்தில் வருவதால் ஒருசிலருக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படும். கைப்பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் பொருட்கள் திருடுபோக வாய்ப்புகள் உள்ளன. எனவே நகைபோன்ற விலையுயர்ந்த பொருட்களை லாக்கரில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும்போது குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.
நிதானப் போக்கைக் கொண்ட கும்ப ராசி அன்பர்கள் எல்லாரும் நல்ல பலனை அடைவார்கள். முரட்டு சுபாவம், முரட்டுப் பேச்சு உள்ளவர்கள் தங்கள் பேச்சால் கெட்ட பெயர் எடுப்பார்கள். பின்பு தங்களைத் திருத்திக்கொண்டு பொருளாதார உயர்வுக்கான வழிகளைக் காண்பார்கள். குலதெய்வத்தை வணங்கி வருவோருக்கும் நல்ல பலன்கள் கிட்டும். உங்கள் வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சாரம் செய்கின்றார். எனவே நீங்கள் எப்போதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்நிய மொழி பேசுபவர்கள், மாற்று மதத்தவர்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். பிள்ளைகள் வகையில் அனைத்து சுபகாரியமும் நடக்கும்.
சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு கடன் பெறாத வகையில் வருமானம் கூடும். அதிகாரத் தோரணையில் பேசுவதால் காரியங்கள் கெட்டுவிடும். எல்லாருடனும் கனிவான பேச்சுடன் பழகினால் காரியம் அனைத்திலும் வெற்றியைக் காணலாம். குடும்பச் சுமைகள் கூடுமென்றாலும், புதிய யுக்திகளைக் கையாண்டு பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வீர்கள். ஒருசில கும்ப ராசி அன்பர்கள் வெளிநாடு செல்வார்கள். சென்ற இடத்தில் நல்ல பொருளாதாரத்தையும் அடைவார்கள்.
பெண்கள்
மிகவும் நிதானத்துடனும் சிக்கனமாகவும் நடந்துகொள்ளவேண்டும். கருத்து வேறுபாடு ஏற்படாத வகையிலும் நடந்துகொள்ளவேண்டும். 13-6-2014 முதல் நீங்கள் காட்டிய பொறுமைக்கு நல்ல பலனைக் காண்பீர்கள். 12-6-2014-க்குள் திருமண நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். 12-6-2014-க்குள் பொன், பொருள், நகை வாங்கிச்சேர்ப்பீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் அதிகமான சலுகைகளை அடைவார்கள்.
மாணவர்கள்மாணவர்கள் 12-6-2014-க்கு முன்பு நடக்கும் இந்தக் கல்வியாண்டில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். அதன்பிறகு கல்வியில் மிகவும் கவனமாகப் படித்து முன்னேற வேண்டும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அனுகூலமுண்டு. அந்தத் தொழிலையும் 12-6-2014-க்குள் ஆரம்பிக்கவேண்டும். 13-6-2014-க்குமேல் தொடங்கினால் அதிகமாக உழைத்து, சிரமப்பட்டு தொழிலைக் காப்பாற்றவேண்டியது வரும். கடல் வாணிபம், டீசல், பெட்ரோல், வாசனை திரவியம், பாதரசம் விற்பனை செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அழியும்பொருள் வியாபாரம் சிறப்பைத் தரும். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து தொழில் செய்கிறவர்கள் கெடுதல்களை அடைவார்கள்.
விவசாயிகள்
முதல் ஐந்து மாதங்களுக்கு, நீங்கள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன்பின்பு விவசாயத்தை நடத்த சிறுசிறு சிரமங்களை சந்திக்கவேண்டியது வரும். இருப்பினும் பாதகமான நிலை ஏற்பட வாய்ப்புகள் இல்லை. சிலர் புதிய நிலம் வாங்குவார்கள். நவீன கருவிகள் மூலம் செய்யும் சாகுபடியில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணப்பயிர் செய்பவர்கள் இந்த ஆண்டு லாபம் பெறுவார்கள். ஒரேமாதிரி விவசாயத்தைச் செய்துவந்த விவசாயிகள், காலத்துக்கேற்றவாறு விவசாயம் செய்து அதிக மகசூலைப் பெறுவார்கள்.
அரசுப் பணியாளர்கள்
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிட்டும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 13-6-2014 முதல் வேலைப் பளு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு 12-6-2014-க்குள் வேலை கிட்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் வேலைபார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். 12-6-2014-க்குள் எதிர்பார்த்த பதவி உயர்வு வந்துசேரும். பொதுவாக அரசு ஊழியர்கள் தங்களுடன் பணிபுரியும் சகஊழியர்களுடன் கனிவாகப் பேசவேண்டும். பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
கலைத்துறையினர்
கலைஞர்களுக்கு அதிகமான படவாய்ப்புகள் கிட்டும். 12-6-2014 வரையிலும் வருமானம் கூடுதலாக வரும். உங்களின் பிள்ளைகளால் தொல்லைகள் உருவாகும். எனவே அவர்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
அரசியல் பிரமுகர்கள்
12-6-2014 வரையிலும் குரு பகவான் சாதகமான நிலையில் செயல்படுகின்றார். எனவே எம்.பி. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வெற்றியடையலாம். குரு 5-ல் உள்ளதால் குலதெய்வ அருள் உங்கள் வெற்றிக்குக் கைகொடுக்கும். 13-6-2014 முதல் நிதானித்துச் செயல்படுங்கள்.
75% நன்மை
இந்த ஆண்டு கும்ப ராசி அன்பர்கள் 75 சதவிகித நன்மை அடைவார்கள். 11 பங்கு லாபம் உண்டு. விரயம் 4 பங்கு உள்ளது. ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 4 பங்கு, ராஜபூஜிதம் 2 பங்கு, 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம் உள்ளது. ராஜயோகம் 6 பங்கு (வேலை பார்க்காதவர்களுக்கு அரசு வேலை வரும். குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வேலைக்குச் செல்வார்கள்.)
அவிட்டம் மற்றும் சதய நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை ஆறு பங்கு வருமானம் உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சிறப்பாக இருக்காது. எனவே மிகவும் சிக்கனமாக செலவுசெய்யவேண்டும். கடந்த காலத்தில் சேமித்தது இப்போது கைகொடுக்கும்.
மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானமுண்டு. கூடுதல் வருவாயைப் பெற சிறப்பாக உழைக்கவேண்டும். இந்தக் காலத்தில் உங்களுக்கு சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். எதிர்கால யோகமும் உண்டு.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை நான்கு பங்கு லாபம் உண்டு. குடும்பத்தில் வருமானம் கூடும். தாய்மாமன் நிலை உயரும். சேமிப்பு கூடும். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானத்திற்குக் குறைவில்லை. எப்போதும்போல குடும்பச்செலவுகள் இருக்கும். குடும்பத்தில் சௌபாக்கியம் ஏற்படும்.மார்கழி முதல் பங்குனி வரை ஓரளவு வருமானம் வரும். கடந்த காலங்களில் உள்ள சேமிப்பு இப்போது கைகொடுக்கும். எதிர்காலம் நல்ல பலன்களைத் தரும். தனலாபம் உண்டு.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) பைரவருக்கு 27 எலுமிச்சம் பழத்தை மாலையாகக் கோர்த்து அணிவிக்கவேண்டும். (ஆலயத்தில் உள்ள வழக்கப்படி மற்ற பரிகாரங்களும் செய்துகொள்ளவேண்டும்.) முடிந்தவரை மாதம் ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்துவர, நன்மைகள் உண்டு. தினசரி சூரிய நமஸ்காரம் செய்துவர, சிரமங்கள் குறையும்.
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-மகரம்
மகரம்: உத்தராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)
உங்கள்
இராசிநாதன் சனி 10-ல் அமர்ந்து
உள்ளான். சந்திரனுடன் சுகாதிபதி செவ்வாய் இணைந்து உள்ளார். பிரச்னைகள்
அனைத்தும் காற்றில் பறந்தோடி விடும். சண்டை, சச்சரவு,
வழக்கு அத்தனையும் தவிடு பொடியாகிவிடும். செல்வந்தர்கள்
உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு நிம்மதி பிறக்கும். பொன்,
பொருள் சேரும். கடன்பட்டாவது வீடு,
மனை வாங்கி விடுவீர்கள் காரணம்,
குரு 6-ல் இருப்பதால் அதை
செய்தே தீருவார். சுகஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், பெற்றோர்
உடல்நலனில் கவனம் தேவை. அலைச்சல்
அதிகரித்தாலும் கை நிறைய காசுதான்.
பொதுவாக புதன் யோகத்தை வாரி
வழங்குவார்.
இருந்தாலும், அவர் இருக்கும் இடத்திலிருந்து 7-ஆம் பார்வையாகத் தன் சொந்த வீட்டைப் பார்க்கின்றார். அதனால் ராசிக்கு 6-ல் உள்ள குருவால் ஏற்படும் துன்பங்கள் குறையும். சுயஜாதகத்தில் குரு நல்ல நிலையிலிருக்கப் பிறந்த மகர ராசி அன்பர்கள் நல்ல லாபத்தை அடைவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாகத் தங்கள் பணிகளைச் செய்யவேண்டும். ஒருசிலர் தன்னிலை தவறுவதால் பணியில் குற்றங்கள் ஏற்பட்டு, தற்காலிகப் பணிநீக்கம் போன்ற தண்டனையை அடையக்கூடும். எப்போதும் கையூட்டுப் பெறாமலிருப்பது நல்லது; வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். வங்கிக்கடன் பெற்றிருந்தால் அதனைத் திரும்பச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்படலாம்.
குரு பகவான் 6-ல் உள்ள காலகட்டத்தில்- அதாவது 12-6-2014 வரை வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். நடக்கும்போதும் எச்சரிக்கையாகச் செயல்பட்டால் சிறு விபத்துகளைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் மிகவும் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வதில் தாமதம் ஏற்படும். குழந்தைகளால் அக்கம் பக்கத்தில் சில சங்கடங்களைச் சந்திப்பீர்கள். ஒருசிலருக்கு வளர்ந்த பிள்ளைகளால் தொல்லைகளை அனுபவிக்க வேண்டிவரும். எனவே மகர ராசி அன்பர்கள் 12-6-2014 வரை மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்.
13-6-2014-ல் குரு பகவான் 7-ஆம் இடத்தில் (கடகத்தில்) அமர்வது சிறப்பு. ஒருசிலர் தூரதேசத்தில் வாழ்கிறவர்களின் சொத்தை குத்தகைக்கு எடுத்து, அதன்மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். குரு பகவான் உங்கள் பிறந்த ஜாதகத்தில் உச்சம், ஆட்சி வீடுகளில் இருந்தால், அவர்கள் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடுவார்கள். தற்காலிகப் பணிநீக்கம் போன்ற நிலைகளிலுள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கான உத்தரவைப் பெறுவார்கள். தனியார் துறையில் பணிபுரிந்து, தற்சமயம் வேலையில்லாமல் இருப்பவர்கள் வேறு நிறுவனங்களில் புதிய பொறுப்புகளில் அமர்வார்கள். அவர்களது செல்வாக்கும் கூடும்.
விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் செய்கின்றவர்கள் அதிகமான லாபத்தை அடைவார்கள். ஒருசிலர் புதிதாக நெல் அறுவடை எந்திரம், ஜே.சி.பி போன்ற எந்திரங்களை வாங்குவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். உங்கள் எந்திரங்கள் ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். நீண்டகாலமாக குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சம்பந்தம் வந்துசேரும். அரசாங்கத்திலுள்ள கடன்களைக் கட்டி நிவர்த்திபெறுவீர்கள்.
ஒருசிலர் அடகுவைத்த நகைகளை பாக்கியின்றி மீட்பார்கள். புதிய வீடு, மனைவாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பிரிந்துவாழும் தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். மேலும் பல்வேறு நன்மைகளைத் தரவிருக்கின்றார் குரு பகவான். இந்த காலகட்டங்களில், நீங்கள் ஏற்கெனவே பலமுறை சொல்லிக்கொண்டிருந்த திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அதற்கான புள்ளியை மட்டும் வைத்துவிட்டால் போதும். கோடு போட்டால் ரோடு போடலாம் என்பதுபோல் சாதித்துவிடுவீர்கள்.
செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அதோடு குரு பகவானின் 5-ஆம் இடத்துப் பார்வையும் நன்மை தரும்.
இந்த ஜய வருடத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் துலாம் வீட்டில் உச்சம்பெற்று, 16-12-2014 வரையிலும் இருப்பார். இந்த காலகட்டத்தில் கூட்டுத்தொழில் செய்கின்றவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சுயஜாதகத்தில் 10-க்குரியவர் 6-ல் இருந்தால் கூட்டுத்தொழிலில் ஏமாற்றம் வரும். எனவே உங்கள் ஜாதகத்தைப் பார்த்து, அதன்படி செயல்படுவது உத்தமம்.
சிலரின் தீய பழக்கவழக்கத்தால் அளவுக்கதிகமாக கடன்பட நேரிடும். அதனால் சிலர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களுக்குத் தெரிவித்து, அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும். ஒருசிலர் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பெரிய மனிதர்களின் ஆசியும், தனவந்தவர்களின் உதவியும்பெற்று வாழலாம். நடப்பு ஜய வருடத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும். பல பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டால் நிம்மதியின்றித் தவிக்க நேரிடும். இதயக் கோளாறு ஏற்படும். எது எப்படி நடந்தாலும், நடப்பது நடக்கட்டும் என்றிருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
சிலர் திட்டமிட்டபடி வெளிநாடு செல்வார்கள். லாகிரி வஸ்துகள் விற்பனை செய்கிறவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசுப் பணியாளர்களில் நல்ல நடத்தையுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணிமாற்றமும், பதவி உயர்வும் வந்துசேரும். எதிர்பாராதவிதமாக ஒருசிலருக்கு புதிய வீடுகட்ட, வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். இதுவரை உங்களிடம் மாற்றுக் கருத்துடன் செயல்பட்ட எதிரிகள் நண்பராவார்கள். சனி பகவான் உங்களுக்கு நல்ல எண்ணங்களை வழங்குவார். 16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் உலா வர உள்ளார். தாயாதி சொத்துகள் சிலருக்குக் கிடைக்கும்.
21-6-2014 வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடத்தில் உலா வருகிறார். ராசிக்கு 9-ஆம் இடத்திலுள்ள ராகு பகவான், தடை, தாமதப்படும் காரியங்களை வெற்றியாக உன்னதமாக மாற்றித்தருவார். உங்கள் பையிலுள்ள பணத்துக்காக கூடிய கூட்டம் விலகிச்செல்லும். நல்ல நண்பர்கள் வந்துசேர்வார்கள். அவர்களின் ஒத்துழைப்போடு பல நல்ல காரியங்களை நடத்திமுடிப்பீர்கள். ஒருசிலருக்கு பக்திநாட்டம் அதிகரிக்கும். பாடுபட்டும் பலனில்லையே என்று வருத்தப்பட்டவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். பணம் வந்து பையை நிரப்பும்.
ராகு பகவான் ராசிக்கு 9-ல் இருப்பது உங்களுக்கு பொற்காலம். பொன், பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். திருமணமாகாத வர்களுக்கு நல்ல வரன் அமையும். மனக்குறைகள் நீங்கும். பிள்ளைகளால் நல்ல வருமானமும் பெருமையும் வந்துசேரும். மூதாதையர்கள் சொத்துப் பிரிவினையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். உடன்பிறந்தவர் களுக்கு தள்ளிப்போன திருமணம் இனிதே நடந்தேறும். அலைச்சல் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயமும் உண்டு.
கணவன்- மனைவி பேச்சில் இனிமைகூடும். வீட்டில் இதுவரை தடைப்பட்டு வந்த திருமணப்பேச்சுகள் நல்லபடியாய் நடக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். இதுவரை வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவித்த ஆண்- பெண் இருபாலருக்கும் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலர் மத்திய அரசில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். வீட்டில் சுபச்செலவுகள் நடக்கும். வெளியூர் பயணம் அடிக்கடி ஏற்படும். நல்ல லாபத்தையும் பெறுவீர்கள். வேலையிழந்த அரசு ஊழியர்கள் ஒருசிலர் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். தொல்லைகொடுத்த வியாபாரிகள் விலகிச்செல்வதால், வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவார்கள்.
ராகு பகவான் பெயர்ச்சியாகும் அதே தேதியில், கேது பகவான் 4-ல் இருந்து உங்கள் ராசிக்கு 3-ல் மீனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். இது சிறப்பான இடம். இறையருளையும், காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தையும் மேம்படுத்துவார். பொதுவாக 3-ஆம் இடத்தில் கேது வந்தால் வாழ்க்கை வசந்தகாலமாகும். மறைவிடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்களை அள்ளித்தருவார். கேட்ட இடத்தில் உதவிகள் உடனே கிடைக்கும். மற்றவர்கள் உங்களை மதித்து நடக்கும் காலமிது. கூட்டுத் தொழில், புரிகிறவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையலாம்.
கூட்டாளிகள் இப்போது உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் தடையின்றி நடக்கும். இதுவரை உங்களைக் கண்டுகொள்ளாத உறவுகளும் உடன்பிறப்புகளும் ஆதரவாகச் செயல்படுவார்கள். வீடுகட்ட போட்ட திட்டம் நிறைவேறும். கட்டிய வீட்டை வாங்கவேண்டுமென்று நினைப்பவர்களும் வாங்கலாம். உங்கள் சேமிப்பு நிலை உயரும். பிள்ளைகள் அடங்கவில்லையே என்ற உங்கள் கவலைகள் தீரும். தொல்லை கொடுத்துவந்தவர்கள் நல்ல பிள்ளைகளாக மாறுவார்கள்.
படித்த பிள்ளைகள் வீட்டு நிலையை உணர்ந்து, வெளிநாடு சென்று பொருளீட்டுவார்கள். லாபத் தொகையை தன்னைப் பெற்றுவளர்த்த தாய்- தந்தையருக்கு தவறாமல் அனுப்பிவைப்பார்கள். ஒருசிலர் விசா செலவுகூட இல்லாமல், வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். இப்போது இறைவன் உங்கள்பக்கம் உள்ளார். எனவே மூத்தவர்கள், இளையவர்கள் என்றில்லாமல் மறுநாள் செய்ய நினைத்த காரியத்தை அன்றே முடிப்பார்கள். அதிகமான லாபத்தையும் பெறுவார்கள். கணவன்- மனைவி பேச்சில் இனிய பலன் வரும்.
பெண்கள்
உங்கள் பெயரில் வீடுவாங்க போட்ட திட்டம் 13-6-2014-க்குமேல் நிறைவேறும். நல்ல வீடாக வருகிறதென்றால், கணவரின் கிரகப் பலனைப் பொறுத்து அவர் பெயரில் வாங்கிக்கொள்ளலாம். வேலைக்குப் போகும் பெண்கள் 13-6-2014 முதல் சலுகைகளைப் பெறுவார்கள். நகை வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் வந்துசேரும். பெற்றோர் மற்றும் சகோதரர்களால் கிடைக்கவேண்டிய எல்லா பலன்களும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் தடைப்பட்டுவந்த அனைத்து காரியங்களும் நடக்கும்.
மாணவர்கள்
நீங்கள் இந்த கல்வியாண்டில் அதிக சிரத்தையெடுத்துப் படிக்கவேண்டும். 13-6-2014-க்குப் பிறகு அடுத்த கல்வியாண்டில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலர் கேம்பஸ் செலக்ஷனில் தேர்வுபெறுவார்கள். இதுவரை கல்வியில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உயர்கல்வி படிக்க வங்கிக் கடன் தடையின்றிக் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்கவேண்டியதிருக்கும். ஆண்டின் முற்பகுதியில் பணவிரயம் ஏற்படலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்கவேண்டாம். போட்டியாளர்கள் தரும் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். அதே போல சேர்க்கை, சகவாசத்தாலும் பணம் வீணாகும். எனவே நீங்கள் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 13-6-2014 முதல் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கி அதில் வெற்றியடையவும் அதிக வாய்ப்புள்ளது.
விவசாயிகள்
முதல் ஐந்து மாதத்துக்கு, உழவுத் தொழிலில் சிரமமிருந்தாலும் பின்வரும் காலத்தில் சரியாகிவிடும். மகசூல் அதிகரிக்கவும், புதிய நிலம் வாங்கவும் யோகமுண்டு. நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி மகசூலை அதிகரிப்பீர்கள். புதிதாக உழவுக்கருவிகள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். புகையிலை விவசாயம் செய்கின்றவர்கள் நல்ல மகசூலைப் பெறுவார்கள். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த பக்கத்து விவசாயிகள், பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பால் பாக்கிய விருத்தி ஏற்படும். ஒருசிலர் கூட்டாக பால்பண்ணை வைக்க போட்ட திட்டம் நிறைவேறும்.
அரசுப் பணியாளர்கள்
ஆண்டின் துவக்கம் சுமாராக இருக்கும். வேலைப்பளுவும் அலைச்சலும் கூடும். ஒருசிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். 13-6-2014 முதல் மந்தநிலை மாறும். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களைப் புரிந்துகொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையில் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியிலிருந்து விடுபடுவர். அலுவலகத்தில் சக பணியாளர்கள் வகையில் சற்று கவனம் தேவை.
கலைத்துறையினர்
முயற்சியின்பேரில் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். 13-6-2014 முதல் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இது பொற்காலம். புதுமுகங்களை இயக்குநர்கள் அடையாளம்கண்டு வாய்ப்புகளைத் தருவார்கள்.
அரசியல் பிரமுகர்கள்
இதுவரை உங்களை இகழ்வாகப் பேசியவர்கள் வலியவந்து புகழ்வார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தலைமையால் பாராட்டப்படுவதோடு புதிய பதவிகளையும் அடைவார்கள். உங்களது தன்னலமில்லாத உழைப்பிற்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள்.
80% நன்மை
மகர ராசி அன்பர்கள் இந்த ஆண்டு 80 சதவிகித நன்மை அடைவார்கள். லாபம் 11 பங்கு வரும். விரயம் 4 பங்கு உள்ளது. ஆரோக்கியம் 4 பங்கு, அவஆரோக்கியம் 4 பங்கு, 2 பங்கு ராஜபூஜிதம், 6 பங்கு ராஜயோகம் (வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும்), 3 பங்கு சுகம், 3 பங்கு துக்கம்.
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-தனுசு
தனுசு: மூல ம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)
உங்கள்
இராசிநாதன் குரு, 7-ல் வெகு
அமர்க்களமாக அமர்ந்து இருக்கிறான். கவலையே இல்லை. 10-ம்
இடத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்து, “சந்திர மங்கள யோகம்” உள்ளதால், எடுத்த காரியம் எல்லாம்
ஜெயம்தான். உத்தியோகம், தொழில் வெகு ஜோராக
நடக்கும். சுகஸ்தானத்தில் புதன். கல்வியில் மதிப்பெண்கள்
அதிகரிக்கும். மேற்படிப்பு தொடரும். சப்தம குரு, உங்கள்
கீர்த்தியை பெருகச்செய்யும். பஞ்சமத்தில் சூரியன், சொத்துக்கள் விஷயத்தில் வில்லங்கம் இருந்தால் தீர்த்து வைக்கும். ஜாமீன் விஷயத்தில் மட்டும்
கவனம் தேவை. குடும்பத்திற்கு தேவையான
பொருட்கள் வந்தடையும். வாகனம் வாங்கும் யோகம்
உண்டு. சிலருக்கு மனை வாங்கும் பாக்கியம்
கிட்டும்.
உங்களுக்கு, இந்த ஆண்டின் முற்பகுதியில் 12-6-2014 வரை அதிக நன்மைகள் நடக்கும். குரு பகவான் 7-ல் அமர்ந்து நல்ல பலன்கள் வழங்குவார். குரு பகவானின் 7-ஆம் பார்வையுள்ள இந்த காலகட்டத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதர வளம் மேம்படும். வீடு, மனை வாங்கலாம். மேலும் குரு பகவானின் 5-ஆம் இடத்துப் பார்வையும் சாதகமாக உள்ளது. பொருளாதார வளம் மேம்படும்.
இந்த காலகட்டத்தில் ஒருசிலர் தூரதேசத்தில் வாழ்கின்றவர்களின் சொத்தை குத்தகைக்கு எடுத்து, அதன்மூலம் நல்ல லாபத்தை அடைவார்கள். பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் உச்சம், ஆட்சி வீடுகளில் இருந்தால், அவர்கள் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடுவார்கள். தற்காலிகப் பணிநீக்கத்திலுள்ள அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்வார்கள்.
தனியார் துறையில் பணிபுரிந்து, தற்போது வேலையில்லாமல் இருப்பவர்கள் வேறு கம்பெனிகளில் புதிய பொறுப்புகளில் அமர்வார்கள். அவர்களது செல்வாக்கும் கூடும். விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் அதிகமான லாபத்தை அடைவார்கள். ஒருசிலர் புதிதாக நெல் அறுவடை இயந்திரம், ஜே.சி.பி. போன்ற இயந்திரங்களை வாங்குவார்கள். கூடுதல் லாபத்தையும் பெறுவார்கள். உங்கள் எந்திரங்கள் ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். நீண்டகாலமாக குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சம்பந்தம் வந்துசேரும். அரசாங்கத்திலுள்ள கடன்களைக் கட்டி நிவர்த்தி பெறுவீர்கள். ஒருசிலர் அடகு வைத்த நகைகளை பாக்கியின்றி மீட்பார்கள்.
12-6-2014 வரையிலும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் நின்று மேற்கண்டவாறு நல்ல பலன்களை வழங்குவார். எனவே மேற்கண்ட காலங்களில் வரும் வருவாயை அடுத்த ஓராண்டுக்குப் பயன்படும் வகையில் சேமித்து வைத்துக்கொண்டால், புதிய கடன்கள் ஏற்படாது.
13-6-2014 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் அமர்வார். அவர் கடகத்தில் உச்சம்பெற்று தன் சொந்தவீட்டை 9-ஆம் பார்வையாகப் பார்ப்பதால் கூடுதல் உழைப்பையும், லாபத்தையும் தருவார். வாகனங்களில் செல்பவர்கள் பார்த்துச் செல்லவேண்டும். பெரும்பாலும் எல்லா வகையிலும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கடகத்தில் குரு பகவான் இருக்கும் இந்த காலகட்டத்தில் வீணான மனக்குழப்பம் உண்டாகும். பணவிரயம் ஏற்படலாம். அதற்காக நீங்கள் அஞ்சவேண்டாம். குரு பகவான் சாதகமற்ற நிலையிலிருந்தாலும் அவரது 7-ஆம் இடத்துப் பார்வைக்கு தனிசக்தி உண்டு.
மகர ராசியில் விழும் 7-ஆம் பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. அந்த வகையில் உங்களுக்கு எந்த வகையில் இடையூறு வந்தாலும் குரு பகவான் சாதகமாக்கிவிடுவார். எனவே குரு 8-ஆம் இடத்தில் சாதகமற்று இருக்கின்றாரே என்று நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். அப்படியே குரு பகவான் சிறுசிறு இடையூறுகளைச் செய்தாலும், அது உங்களுக்குப் பாடம் புகட்டுவது போலத்தான் இருக்குமேயன்றி தண்டனை கொடுப்பதாக அமையாது.
குரு பகவான் 8-ல் அமர்ந்துள்ள இந்த நேரத்தில், அவர் 9-ஆம் பார்வையாக தன் சொந்தவீட்டைப் பார்க்கிறார். எனவே தடை, தாமதங்கள் நீங்கும். அரசுப் பதவி தேடுகின்றவர்களில் சிலர் அதை அடைவார்கள். ஒருசிலர் தேர்தலில் வெற்றிபெற்று, அமைச்சர் பொறுப்புக்கும் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது. சிலருக்கு வயிற்று வலி போன்ற தொந்தரவு வரும். எனவே 27 கருப்பு கொண்டைக்கடலை எடுத்து மஞ்சள் துணியில் முடிந்து, எப்போதும் பர்சில் வைத்துக் கொள்ள, அனைத்தும் சாதகமாக நடக்கும்.
சனி பகவானைப் பொறுத்தவரையில் உங்கள் ராசிக்கு 11-ல் 16-12-2014 வரையிலும் இருப்பார். இது உங்களுக்கு சாதகமான இடம். இப்போது குரு பகவான் பல்வேறு நன்மைகளைச் செய்வார். அவரால் பொன், பொருள் வாங்குவீர்கள். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.
4-3-2014 முதல் 19-7-2014 வரையிலும் சனி பகவான் வக்ரநிலையில் உள்ளார். அதனாலும், நன்மையுண்டாகும். கெடுதல் என்பது அதிகம் வராது.
சனி பகவான் அருளால் தடை, தாமதங்கள் அனைத்தும் மாறும். எதிர்பாராத வகையில் எல்லா செயல்களிலும் நல்ல வருவாய் கிடைக்கும். ஒருசிலருக்கு மாமியார் வீட்டு சொத்து வந்துசேரும். சிலர் மாளிகை போன்ற வீட்டைக் கட்டி குடிபோவார்கள். சிலருக்கு எதிர்பாராத யோகமுண்டு. சிலருக்கு அரசியல் செல்வாக்கு அதிகமாக இருக்கும். நகைக் கடை அதிபர்கள் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். பழைய நகைகள் வாங்கிவிற்பவர்கள் யோசித்துச் செய்யவேண்டும். பழைய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய நண்பர்களால் உதவி இருக்காது.
நீண்டகால திட்டங்களும் ஆசைகளும் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் உள்ளவர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளை வலியவந்து செய்வார்கள். குடும்பத்தில் இதுவரை நடந்துவந்த குழப்பங்கள் நீங்கும். கடந்த காலத்தில் உங்கள் அனுபவத்தில் நிறைய இழப்புகளை சந்தித்திருப்பீர்கள். இனி அந்த இழப்புகள் 16-12-2014 வரையிலும் வராது.
16-12-2014 முதல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் வருகின்றார். விரயச் சனி காலம் தொடங்குகிறது. எனவே உங்கள் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டும். ஒருசில அரசியல் பிரமுகர்களுக்கு பதவியில் மாற்றம் வரும். ஒருசிலர் வழக்கு சம்பந்தமாக அலையநேரிடும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டத்தை சற்று தள்ளிவைக்க வேண்டும். புதிய கடன்களை வாங்காமல் இருக்கவேண்டும்.
தற்போது நிழல் கிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் துலா வீட்டில் சனி பகவானுடன் இணைந்துள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் கூடும். 21-6-2014-ல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் கன்னி வீட்டில் சென்றமர்வார். இது சிறப்பான இடமில்லை. இங்கிருந்துகொண்டு ராகு பகவான் மற்றவர்களின் பொல்லாப்புக்கு உங்களை ஆளாகச் செய்வார். பெண்கள் வகையில் தொல்லையும் ஏற்படலாம்.
அதேநேரம் அவர் உங்கள் தொழில் வளர்ச்சியைக் கூடச்செய்வார். 10-ல் ராகு உள்ள இந்த காலகட்டத்தில் பூமி, பொருள், அழியாச் செல்வம் வரும். இல்லையென்ற நிலை ஜய வருடத்தில் உங்களுக்கு வராது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தீயவர்கள் விலகிச்செல்வார்கள். வீட்டிற்கு பயன் தராமலிருந்த உங்கள் பிள்ளைகள் இனி உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மனைவி வழியில் தொல்லைகொடுத்துவந்த உறவுகள் விலகிச்செல்வார்கள். ராகு 10-ல் உள்ள இந்த காலகட்டத்தில் இயந்திரங்களைக் கையாள்வோர் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். அதன்மூலம் வரக்கூடிய விபத்துகளைத் தவிர்க்கலாம். வயல்வெளி, காட்டுப் பகுதியில் வேலை செய்பவர்களும், மற்றவர்களும் பாம்புகளால் ஆபத்து வராதபடி நீங்கள்தான் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். தனுசு ராசியில் பிறந்துள்ள அனைவரும் சர்ப்பதோஷப் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும்.
அப்படி செய்தால் உங்களுக்குப் பொருளாதார உயர்வும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும். எவ்வளவுதான் முன்னேற்றங்கள் உங்களுக்கு ஏற்பட்டாலும், ஏதாவது ஒரு கவலை தொற்றிக்கொள்ளும். புதியவர்களைத் தொழில்கூட்டாளிகளாகச் சேர்க்கும்போது, அவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்து சேர்க்கவேண்டும். மறைமுக வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். குடும்பத்தில் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் கைகூடும். காதல் திருமணம் கைவிட்டுப்போகும். பெற்றவர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்கள் கைகூடும்.
20-6-2014 வரை இன்னொரு நிழல் கிரகமான கேது பகவான் 5-ஆம் வீட்டில் இருப்பார். இது சிறப்பான இடமல்ல. இதனால் எதிரிகளின் தொல்லை வரும். உடல்நலம் லேசாக பாதிக்கப்படும். அதிலும் பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவைப்படும். 21-6-2014-ல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் இடமான மீனத்திற்குச் செல்வார். இப்போது எல்லாமே நன்மையாக அமையும். ஆனால் உங்கள் கூட்டாளிகள், நண்பர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும். உங்களின் சேர்க்கை, சகவாசம் உங்களைக் கெடுக்கும். நல்ல நண்பர்களிடம்கூட கவனமாகப் பழகவேண்டும். கேது 4-ல் உள்ளபோது ஆள்பலமறிந்து, அவரின் தன்மையறிந்து பழகவேண்டும். அவர்களின் உண்மைசொரூபம் தெரிந்து பழகினால் ஆனந்தமாய் காலம்கழிக்கலாம். ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வந்துநீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவேண்டும்.
4-ஆம் இடம் என்பது தாய்வழி உறவுகளைப் பற்றி அறிய உதவும் இடம். இதுவரை நீங்கள் பெருமையாக நினைத்த தாய்வழி உறவுகள் இப்போது கெடுதலாகத் தோன்றும். உங்கள் செயல்பாடுகளில் இனி சாந்தமான குணத்தைக் காணலாம். வீடு, மனை விருத்திகள் ஏற்படும். குடும்பத்திலும் சுற்றத்திலும் இருந்துவந்த கசப்புணர்வுகள் நீங்கும். விரயங்கள் அனைத்தும் சுபவிரயச் செலவுகளாக மாறும். உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுவாக கேது பகவான் கீர்த்திகளைத் தருவார் என்றாலும், தாய்வழி உறவுகளோடு பகையை உண்டாக்கப் பார்ப்பார். எனவே நீங்கள் முடிந்த அளவு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயம் சென்று வழிபட்டு வரவேண்டும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு, விரும்பிய இடத்துக்கு மாறுதல் வரும். ஒருசிலர் பதவி உயர்வோடு மாறுதலில் செல்வார்கள். கேது பகவான் கெடுக்கமாட்டார். நல்ல அனுபவங்களைப் பெறச்செய்வார். அது நமக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
சொத்துகள் வாங்கும்போது குடும்ப உறவினர்கள் ஜாதகத்தைப் பார்த்து வாங்கவேண்டும். ஒருசிலர் தாயாரின் உடல்நிலையில் சற்று கவனம் கொள்ளவேண்டும்.
பெண்கள்
உங்களுக்கு ஆண்டின் ஆரம்பத்தில் பணத்திற்கு எந்தக் குறையும் இல்லை. பின்னாளில் சிறிது சிரமம் உள்ளது. நகை வாங்கும் திட்டத்தை ஆண்டின் முற்பகுதியில் முடித்துவிடவேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு 13-6-2014-க்குள் திருமணம் முடிவுக்கு வரும். உடன்பிறந்தோரிடையே இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள்.
மாணவர்கள்
இந்த கல்வியாண்டில் 13-6-2014-க்குள் நடைபெறும் தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அதன்பிறகு கடுமையாகப் படிக்கவேண்டும். அடுத்த கல்வியாண்டில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே மெரிட்டில் பாஸ் செய்யமுடியும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அனுகூலமான போக்கு காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவித் தொகை 13-6-2014-க்குள் கிடைக்கும். ஒருசிலர் தீய நண்பர்களின் சேர்க்கைக்கு ஆளாகி அவதியடைய வாய்ப்புகள் அதிகமுள்ளது. எனவே இனம்தெரியாத நபர்களை நம்பவேண்டாம். அவர்களிடம் பண விஷயத்தில் எந்தத் தொடர்பும் கூடாது.
விவசாயிகள்
விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயத்தில் வளர்ச்சி காண்பார்கள். முதல் ஆறு மாதங்களில் புதிய நிலம், நவீன விவசாயக் கருவிகள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பணப்பயிர்களைப் பயிரிடுவோர் யோசித்துச் செய்யவேண்டும். அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.
அரசுப் பணியாளர்கள்
இந்த ஜய வருடத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆர்வமாகப் பணிசெய்யும் சுபாவம் உருவாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாறுதலைப் பெறலாம். இந்த அனைத்து நன்மைகளும் 12-6-2014 வரை நடைபெறும். வேலையின்றி இருப்பவர்களுக்கு அதற்குள் வேலைகிடைக்க வாய்ப்புண்டு. 13-6-2014 முதல் பார்க்கும் வேலையில் அதிக பளு உண்டாகும். ஒருசிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். 17-7-2014 முதல் காவல்துறை, ராணுவம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் தங்கள் பணியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
கலைத்துறையினர்
புதிய வாய்ப்புகள் வந்துசேரும். 13-6-2014-க்குப் பிறகு முயற்சியின்பேரில் மட்டும் வாய்ப்புகள் வரும். பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சேமிப்பு உங்களுக்கு கைகொடுக்கும்.
அரசியல் பிரமுகர்கள்
12-6-2014 வரையிலும் அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் கூடும். எதிர்பார்த்த புதிய பதவிகள் வந்துசேரும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். இந்த ஆண்டு எம்.பி. தேர்தலில் சீட் கிடைப்பவர்கள் வெற்றியைக் காண்பார்கள். ஒருசிலர் அமைச்சர் பொறுப்பையும் அடைவார்கள்.
70% நன்மை
இந்த ஆண்டு தனுசு ராசி அன்பர்கள் 70 சதவிகித நன்மையை அடைவார்கள். 8 பங்கு லாபம் பெறுவீர்கள். 2 பங்கு விரயம் ஏற்படும். ஆரோக்கியம் 3 பங்கு, அவஆரோக்கியம் 2 பங்கு, ராஜபூஜிதம் 8 பங்கு, ராஜயோகம் 6 பங்கு, சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு உள்ளது. எனவே இந்த ஆண்டில் தேர்தலில் நிற்கும் அரசியல் பிரமுகர்கள் வெற்றிபெறுவார்கள்.
மூல நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை சீரான வருமானம் இருக்கும். எனவே நீங்கள் எப்போதும்போல பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ் வீர்கள்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராகவே இருக்கும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல பலன்களே உருவாகும். சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். காலத்தே செய்யும் அனைத்து காரியத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
மார்கழி முதல் பங்குனி வரை உதிரி வருமானமும், எப்போதுமுள்ள வருமானமும் வரும். இப்போது நீங்கள் மனச்சோர்வில்லாமல் அனைத்து காரியங்களையும் செய்வீர்கள். சேமிப்பு கூடுதலாகும். சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் ஏற்படும். எதிர்காலம் யோகம் தரும்.
பூராடம் மற்றும் உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை கூடுதலான லாபத்தையும், உதிரி வருமானங்களையும் பெறுவீர்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்ளவேண்டும். பின்னாளில் அது உங்களுக்குக் கைகொடுக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வருமானம் சீராகும்.
ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் குறைவாக உள்ளது. எனவே நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் செலவுகளைத் தவிர்க்கவேண்டும். புதிய கடன்களை வாங்காமல் தள்ளிப்போட வேண்டும்.
மார்கழி முதல் பங்குனி வரை சீரான வருமானம் உள்ளது. அநாவசிய செலவுகள் வராது. ஒருசிலருக்கு தூரதேசப் பயணம் கைகொடுக்கும். சௌபாக்கியம் உண்டு. தனலாபம் கிடைக்கும். எதிர்கால யோகமும் உண்டு.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட வேண்டும். அல்லது ஞாயிற்றுக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கிவர, நன்மையுண்டு. அல்லது இந்த ஆண்டு முழுவதும் ஒவ்வொரு தினமும், நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு வெளியில் செல்லுங்கள். காரிய வெற்றிகள் குவியும்.அல்லது தினசரி வீட்டில் சாமி படத்துக்குக்கீழ் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு வெளியில் செல்லுங்கள். பெரிய வெற்றிகள் ஏற்படும்.
2014 தமிழ் ஜய வருட பலன்கள்-துலாம்

துலாம்: சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு…….)
உங்கள்
இராசிநாதன் சுக்கிரன், 5-ம் இடத்தில் அமைந்துள்ளார்.
12-ம் இடத்தில் சந்திரன், செவ்வாயோடு இணைந்துள்ளான். 12-ம் இடம் மறைவு
என்றாலும், புதன் பார்வையால், “மறைந்தவன் நிறைந்து
தருவான்”. ஆகவே கவலை இல்லை.
உங்கள் ஜென்மத்தில் சனி, இராகு இணைந்து,
எதிர்பாரா யோகத்தை கொடுப்பார்கள். காரணம்,
சனி 5-க்குரியவன். ஆகவே சுபநிகழ்ச்சிகள் வீட்டில்
நடக்க இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு
குழந்தை பாக்கியம் அமையும். பூர்வீக சொத்தில் வில்லங்கம்
இருந்தால் தீரும். பங்காளி சண்டை
தீரும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். வாகன பயணத்தில் நிதானம்
தேவை. 8-க்குரிய சுக்கிரன் 6-ல்
உள்ளதால், மனைவியால் எதிர்பாரா லாபம் உண்டு. சப்தமத்தில்
சூரியன் உச்சம். நண்பர்கள் உதவி
வந்தடையும்.
வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்க நினைத்த எண்ணம் கைகூடும். இதுவரையில் இருந்துவந்த தடை நீங்கும். வயதுவந்த பிள்ளைகளிடம் பெற்றோர்கள் கோபமாகப் பேசக் கூடாது. திருமண வயதுள்ள ஆண்- பெண் இருபாலரையும் கண்காணிக்க வேண்டும். அவர்களில் சிலர் காதல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகலாம்.
13-6-2014 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ல் கடகத்தில் வருகிறார். ராசிக்கு 10-ஆம் இடம் என்பது ஜீவனஸ்தானம். குரு 10-ல் வருவது சிறப்பில்லை என்றாலும், உங்கள் சுயஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இடம் பெற்றிருந்தால் அதிக கஷ்டங்களை அனுபவிக்க மாட்டீர்கள்.
13-6-2014 முதல் எதிலும் சிக்கன நிலையைக் கையாளவேண்டும். வருமானம் முன்புபோல் இல்லாமல் சற்று குறையும். புதிய கடன் வாங்க நேரலாம். வரவுக்குள் செலவுசெய்து புதிதாகக் கடன்படுவதைத் தவிர்க்கலாம். மளிகைக்கடை நடத்துபவர்கள் இந்த ஆண்டில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். உணவு வகை, நவதானியம், எண்ணெய் வகை வியாபாரம் மேற்கொள்கின்றவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மொத்த வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள்.
குரு பகவானால் பொருள் விரயம் ஏற்படலாம். இழப்பையும் தரலாம். மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ஆம் இடத்துப் பார்வை சிறப்பாக அமையும். அதன்மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். மந்தநிலை மறந்து சுறுசுறுப்பு ஏற்படும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். பகைவர்களின் சதித்திட்டம் உங்களிடம் எடுபடாது. அவர்கள் உங்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்வார்கள்.
சனி பகவான் உங்கள் ராசியில் உள்ளார். அவரால் ஒருசிலருக்கு உடல் உபாதைகள் வரலாம். உறவினர்கள் வகையில் வீண்கசப்பு உருவாகலாம். வெளியூர் வாசம் ஏற்படும். 16-12-2014 வரையிலும் சனி பகவான் அதே இடத்தில்தான் இருப்பார். அதற்காக பயம்கொள்ளக்கூடாது. மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும். சனி பகவான் தான் நிற்கும் இடத்திலிருந்து 3, 7, 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். அந்தவகையில் அவரது 3-ஆம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன்மூலம் பொருளாதார வளத்தைக் காணலாம். எடுத்த காரியம் சிறப்படையும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். மேலும் 4-3-2014 முதல் 19-7-2014 வரையிலும் சனி பகவான் வக்ரம் அடைகின்றார். இந்த காலகட்டத்தில் அவரால் சிறப்பாகச் செயல்பட முடியாது. உங்களுக்கு சாதகமற்ற நிலையிலுள்ள சனி பகவான், செயல்படமுடியாமல் போவது உங்களுக்கு சாதகம். மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்புண்டு.
சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனியாக உள்ள இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கூட்டுத் தொழில் செய்கின்றவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரலாம். எனவே முன்பைவிட மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நண்பர்களால் ஏமாற்றம், நம்பிக்கை மோசடி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வதால் கருத்து வேறுபாடுகள் வராமல் தவிர்க்கலாம். பிரிவு வராது. மற்றவர்கள் உங்களுக்கு உதவுவதாக கொடுத்த வாக்கை நம்பி தொழில் செய்யக்கூடாது. உங்களுடன் பணிபுரிகின்றவர்களுக்கு நீங்கள் பரிந்துபேசுவதால் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.
இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கிட சனி பகவானை வணங்கவேண்டும். உடல்நிலையில் அதிக பாதிப்புகளை கொடுக்கமாட்டார். நண்பர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள். ஆபத்துக்கு உதவாத நண்பர்களைவிட்டு விலகிச்செல்வீர்கள். பெண்கள் சனி பகவானை வழிபட்டால் கணவருக்கு நல்ல திருப்பங்கள் வரும். 17-5-2014-க்குள் சனி பகவான் உங்கள் வீட்டில் சுபகாரியப் பேச்சுகளைக் கொண்டுவருவார். பிள்ளைகளின் தடைப்பட்ட கல்வி உயரும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். வேலையிழந்த அரசு ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள்.
அரசாங்க நன்மைகளையும் அடைவார்கள். உயர்கல்வியிலுள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்று, உடனடியாக வேலைவாய்ப்பையும் பெறுவார்கள். ஜீவனப் பாதையில் புதிய வருமானம் வந்துசேரும். குழப்பம் குறையும். தொழில், வியாபார முடக்கம் நீங்கி வருமானம் கூடும். பழைய கடன்கள் பைசலாகும். வேலைதேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வந்துசேரும். விவசாயிகளுக்கு பணவரவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். விலகிச்சென்ற சொந்தங்கள் வந்துசேரும்.
16-12-2014-ல் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ல் வருகிறார். அந்த காலகட்டத்திலிருந்து அடுத்த சனிப்பெயர்ச்சி வரை நீங்கள் மிகவும் கவனமுடன் செயல்படவேண்டும். எல்லா வகையிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
21-6-2014 முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் உலாவருகிறார். அதிக அலைச்சலையும், அதன்மூலம் லாபத்தையும் தருவார் என்பது பொதுவான விதி. அலைச்சல் பயனுள்ள- பலனுள்ள அலைச்சலாக இருக்கும். 12-ல் ராகு வந்தால் விரயங்கள்தான் வருமென்று சொல்வார்கள். உங்கள் சுயஜாதகத்தையும், குடும்ப ஜாதகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் ராகு பகவான் லாபம் தரும் நிலையிலிருந்தால், 12-ல் உள்ள ராகுவால் லாபகரமான பலன்களே வரும். ராகுபகவான் தற்போது நல்ல பலன்களையே தருவார். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களது எல்லா செயல்களும் வெற்றியாக மாறும்.
ஒருசிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வந்துசேரும். இப்போது உங்கள் உழைப்பால் லாபங்கள் அதிகம் வரும். அதனை உடனுக்குடன் சுபவிரயச் செலவாக மாற்றவேண்டும். பொன்நகைகளை வாங்கிச் சேர்க்கலாம். அல்லது இடம் போன்றவற்றை வாங்கி வைக்கலாம். உழைத்துச் சேர்க்கும் பணம் விரயச் செலவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒருசிலர் அடகுபோன பொருட்களையும், சொத்துகளையும் மீட்பார்கள். எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதில் நல்ல உழைப்பைக் கொடுத்து லாபத்தை அடைவீர்கள்.
ஒருசிலருக்கு மலச்சிக்கல் போன்ற பிணிகள் வரும். உடல்நிலை கெடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். காரியம் அனைத்திலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போகாது. எல்லா வகையிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அரசு ஊழியர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று செல்லவேண்டும். உடன்பணிபுரியும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். வெளிவட்டாரப் பழக்கத்தில் நன்மை வராது. எனவே மிகவும் எச்சரிக்கையுடன் வாழவேண்டும்.
21-6-2014 முதல் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் வருவதால் யோகம் உண்டாகும் என்பது பொதுவான ஜோதிடச் சொல். சுய ஜாதகத்தில் கேது இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் வரும். அதற்கான பரிகாரமும் செய்துகொள்ள வேண்டும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். இருப்பினும் நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களை சொல்லக்கூடாது. ஏனெனில் 6-ல் கேது உள்ள இந்த நேரத்தில், நண்பர்கள் உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும். வேறு பாதிப்புகளோ விபத்தோ வராது. உங்கள் கருத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களை வேகமாக வளரவைப்பார் கேது பகவான். எனவே நீங்கள் உங்கள் அருகிலுள்ளவர்களிடம் மிகவும் அனுசரணையாகச் செல்ல வேண்டும்.
புதிய ஒப்பந்தங்கள், புதிய முயற்சிகள் செய்யும்போது, சம்பந்தப்பட்டவர்களிடம் சரியான வழிமுறைகளை எழுதி வாங்கி, பின்பு செயல்பட வேண்டும். மாற்று மதத்தினர், வெளிமாநிலத்தில் உள்ளவர் களால் அதிக லாபம் கிடைக்கக்கூடிய தொழில் அமையும். குடும்பத்தில் பல சீர்திருத்தங்கள் நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை கூடும். ஒருசிலர் வெளிநாடுகளில் அதிக லாபத்துடன்கூடிய தொழிலைச் செய்வார்கள். காலம்காலமாய் இருந்துவந்த பங்காளிகள் சண்டை நீங்கும். கேதுவுக்குப் பரிகாரம் செய்துகொண்டால், கேதுவால் கெடுதல் வராது.
பொதுவாக 6-ல் உள்ள கேது, நாம் மற்றவர்களுக்கு கெடுதல் செய்தால் தான் கெடுதல் செய்வார். திருமணம் முடியாதவர்களுக்கு நல்ல வரன் வந்து சேரும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தொல்லை கொடுத்த வழக்குகள் சாதகமாகச் செல்லும். ஒருசிலர் வீடுவாங்க போட்ட திட்டம் நிறைவேறும். கடிதத் தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்துசேரும்.
பெண்கள்
12-6-2014 வரை வீட்டுச் செலவுக்குரிய பணம் தடையின்றிக் கிடைக்கும். அடுத்த காலகட்டத்தில் முன்புபோல் வரவு வராது. சேமிப்பு உங்களுக்குக் கைகொடுக்கும். திருமண வயதுப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். மனதில் பட்டதை வெளியில் சொல்லக்கூடாது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
மாணவர்கள்
இந்தக் கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். அடுத்த கல்வியாண்டில் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். உங்கள் விடாமுயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களை குருவின் பார்வையால் பெறலாம். மாணவர்கள், ஆசிரியர்கள் உறவு சுமுகமாக இருக்கும்.
தொழிலதிபர்கள்- வியாபாரிகள்
தொழிலதிபர்களும் வியாபாரிகளும் சிறப்பான பலனை அடைவார்கள். அதிக வருமானத்தையும் காண்பார்கள். தற்போது உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்று வருகின்றது. எனவே எதிலும் அதிக முதலீடு செய்யக்கூடாது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் 12-6-2014-க்குள் கிடைக்கும். கடுமையான போட்டி இருக்கும். சற்று கவனத்துடன் செயல்பட்டால் பாதிப்பு எதுவும் வராது.
விவசாயிகள்
கால்நடை வளர்ப்போர் அதிகமான லாபங்களைப் பெறுவார்கள். விவசாயம் சிறப்படையும். அக்டோபருக்குப் பிறகு நிலம், வீட்டுமனை வாங்கலாம். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
அரசுப் பணியாளர்கள்
அரசு ஊழியர்கள் தற்போது அனைத்து சலுகைகளையும் பெறுவார்கள். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். 12-6-2014-க்குள் வேண்டிய பதவியும் மாறுதலும் கிடைக்கும். அதேபோல வேலையில்லாமல் உள்ளவர்கள் புதிதாக வேலை கிடைக்கப் பெறுவார்கள். 13-6-2014 முதல் அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் வேலைப் பளுவை சந்திப்பார்கள். சிலர் இடமாற்றத்தைக் காண்பார்கள். பாதுகாப்பு மற்றும் காவல்துறையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு இறுதியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
கலைத்துறையினர்
புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். ஒருசிலர் அரசாங்க விருதுகளைப் பெறுவார்கள். சக கலைஞர்களிடம் மிகவும் எச்சரிக்கையாகப் பழக வேண்டும். வசதியுடன் வாழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழும் பாராட்டும் கிட்டும்.
அரசியல் பிரமுகர்கள்
உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் இப்போது உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். எம்.எல்.ஏ. பதவியில் இருக்கும் ஒருசிலர், தாங்கள் எதிர்பார்த்த அமைச்சர் பதவியை அடைவார்கள். வாகனங்களில் அதிவேகமாகச் செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
75% நன்மை
இந்த ஆண்டு 75 சதவிகித நன்மைகளை அடைவீர்கள். 14 பங்கு லாபம் வரும். இரண்டு பங்கு விரயம் வரும். ஆரோக்கியம் 2 பங்கு, 5 பங்கு அவஆரோக்கியம் ஏற்படும். (எப்போதும் உணவுக் கட்டுப்பாடு அவசியம்). ராஜபூஜிதம் 8 பங்கு (வேலை தேடுவோர் வேலைவாய்ப்பை அடைவார்கள்), ராஜயோகம் 6 பங்கு, சுகம் 3 பங்கு, துக்கம் 3 பங்கு. எனவே நன்மையுண்டு.
சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை கூடுதல் வருமானம் வரும். சேமிப்பை உயர்த்துவீர்கள். வேண்டியது கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.ஆவணி முதல் கார்த்திகை வரை வருமானம் சீராக இருக்கும். சிக்கனமாக செலவு செய்யவேண்டும்.மார்கழி முதல் பங்குனி வரை வருமானம் சுமாராக இருக்கும். எனவே எதிலும் நிதானித்துச் செயல்படவேண்டும்.
விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை முதல் ஆடி வரை சுமாரான வருமானம் வரும். நிதானமாக செலவு செய்தால், புதிய கடன்கள் ஏற்படாது.ஆவணி முதல் கார்த்திகை வரை கூடுதல் வருமானம் வரும். புதிய தொழில்கள் உங்களுக்கு லாபமாக அமையும். மார்கழி முதல் பங்குனி வரை அதிகமான லாபமும், வருமானமும் உண்டாகும். சௌபாக்கியம் ஏற்படும். தனலாபம் உண்டு. எதிர்காலம் யோகமாக அமையும்.
ஆண்டு முழுவதும் நற்பலன் பெற்றிடப் பரிகாரம்
வெள்ளிக்கிழமையில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வரவேண்டும். பசு மாட்டிற்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்து வெள்ளிக்கிழமைகளில் கொடுத்து வர, லாபம் கூடும்.
Subscribe to:
Comments
(
Atom
)