இராசிகள்
பன்னிரெண்டு.
அவற்றில்
முதல்
இராசி
மேஷம்.
இந்த
மேஷ
இராசியில்
சூரியன்
வரும்
மாதம்
சித்திரை
மாதம்
என
அழைக்கப்படுகிறது.
சூரியபகவான் மேஷத்தில் உச்சமாக அமைந்திருக்கும் சித்திரைமாதத்தில், கண்கண்டதெய்வமான சூரியனை, தமிழர்கள் போற்றிகொண்டாடும் விதமாக தமிழ்புத்தாண்டாகவும், சித்திரைவிழாவாகவும்கொண்டாடப்படுகிறது.
மேஷஇராசியில்தான் சூரியன்உச்சம்பெறுகிறது.
5-ம் இடம், 9-இடம், 11-ம் இடம் அருமையாக இருப்பதால், இந்த வருடம் மக்களுக்கு மகிழ்ச்சியான வருடம்.
இந்த தமிழ்புத்தாண்டின் பெயர் ஜயவருஷம். “ஜெயம்” என்றால்வெற்றி. எல்லாத்துறைகளிலும் ஜெயம் அடைவது. வருடத்தின்பெயரே “ஜய” என்றுவருவதால் உலக மக்கள் அனைவரும் மனமகிழ்ச்சியோடு எல்லாம் வல்ல இறைவன் அருளால் சுபீட்சமாக இருப்பார்கள்.
5-ம் இடம், 9-இடம், 11-ம் இடம் அருமையாக இருப்பதால், இந்த வருடம் மக்களுக்கு மகிழ்ச்சியான வருடம்.
சித்திரை பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது, விக்கினங்கள் தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை பார்த்து வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவை அனைத்தும் தேடி வரும். அதுபோல, சிறப்பான சித்திரை பிறப்பன்று, தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கினால், செந்தில்வேலவன் நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு துணை நின்று வெற்றியை தருவார். அத்துடன், ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்பு அல்லது சர்க்கரையுடன் நெய் கலந்து உங்கள் இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின் படத்தின் முன் வைத்து வணங்கி, தீப ஆராதனை செய்து, அந்த இனிப்பு பிரசாதத்தை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுங்கள். தித்திக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுப நிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைப்பெற அருள் புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி.
அடுத்ததாக, உங்கள் இஷ்டதெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள். இதன் பலனாக, இந்த ஜய வருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இறைவனின் ஆசியால் இனிதாகவும் நடைபெறும்.
இந்த ஜய வருடம், நமக்கு வெற்றி தருகிற வருடமாக அமையட்டும்.
தமிழ்புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாகவோ அல்லது மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தது நம் இல்லம் தேடி வரும்.
“சித்திரையே வருக சிறப்பான வாழ்க்கை தருக” என்று வரவேற்று, ஒவ்வோரு இராசிகாரர்களுக்கான ஜெய வருட பலன்களை பற்றி அடுத்து அறிவோம்.