Wednesday, December 25, 2013

மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்-முயற்சித்து பாருங்கள்.....

நீங்கள் மரபுக் கவிதை எழுத முயற்சிப்பவரா? நீங்கள் எழுதிய மரபுக் கவிதையை சரிபார்க்க உதவுகிறது அவலோகிதம் என்ற தமிழ் யாப்பு மென்பொருள். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது. கீழ்க்கண்ட முகவரியில் இருந்து இதனை பதிவிறக்கிக்கொள்ளலாம்.


இதனை பதிவிறக்கி நமது கணினியில் பதிந்து நமது கவிதைகளை இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் சோதித்துப் பார்க்கலாம். அல்லது நேரடியாக http://www.virtualvinodh.com/avalokita என்ற முகவரிக்குச் சென்று உங்கள் கவிதைகளை உள்ளிட்டு அறிந்து கொண்டு தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்ளலாம்.