Tuesday, December 10, 2013

திருகோணமலையில் பதற்றநிலை...

திருகோணமலை பிரதான பஸ் நிலையத்திற்கு முன் இடம்பெற்ற பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை தோன்றியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று (10) காலை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அங்கு வந்த சிலர் மக்களை ஆர்ப்பாட்டம் செய்யவிடாது தடுத்ததாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் பதாகைகளை பிடுங்கி கிழித்தெறிந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கலகக் குழுவினருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டது.